| 1 | பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்: தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்: பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்: ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன. | யோசு 15:63 யோசு 18:21-28 நியா 1:21 |
| 2 | மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன். | எரே 4:31 ஏசா 1:8 ஏசா 3:16 ஏசா 3:17 புலம் 2:1 புலம் 2:13 |
| 3 | ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்: அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்: அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள். | நாகூ 3:18 |
| 4 | “அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்: எழுந்திருங்கள்: நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்: ஐயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே! | எரே 5:10 எரே 51:27 எரே 51:28 ஏசா 5:26-30 ஏசா 13:2-5 யோவே 3:9 |
| 5 | எழுந்திருங்கள்: இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்: அவள் அரண்மனைகளை அழிப்போம்” என்பார்கள். | எரே 9:21 எரே 17:27 எரே 52:13 2நாளா 36:19 சங் 48:3 ஏசா 32:14 ஓசி 8:14 ஆமோ 2:5 ஆமோ 3:10 ஆமோ 3:11 சகரி 11:1 |
| 6 | படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவளுடைய மரங்களை வெட்டுங்கள்: எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்: அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்: அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே. |
| 7 | கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்: நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன. | நீதி 4:23 ஏசா 57:20 யாக் 3:10-12 |
| 8 | எருசலேமே, எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்: உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன். | எரே 4:14 எரே 7:3-7 எரே 17:23 எரே 31:19 எரே 32:33 எரே 35:13-15 உபா 32:29 சங் 2:10 சங் 50:17 சங் 94:12 நீதி 4:13 செப் 3:7 |
| 9 | படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார். | எரே 16:16 எரே 49:9 எரே 52:28-30 ஒபதி 1:5 ஒபதி 1:6 வெளிப் 14:18 |
| 10 | நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை: அவர்களால் செவிகொடுக்க முடியாது: ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று: அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை. | எரே 5:4 எரே 5:5 ஏசா 28:9-13 ஏசா 53:1 |
| 11 | ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது: அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்: ஆண்டவர் கூறுவது: தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர். | எரே 20:9 யோபு 32:18 யோபு 32:19 எசே 3:14 மீகா 3:8 அப் 4:20 அப் 17:16 அப் 18:5 |
| 12 | அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்: ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன். | எரே 8:10 உபா 28:30-33 உபா 28:39-43 ஏசா 65:21 ஏசா 65:22 புலம் 5:3 புலம் 5:11 செப் 1:13 |
| 13 | ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்: இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள். | எரே 8:10 எரே 14:18 எரே 22:17 எரே 23:11 ஏசா 56:9-12 ஏசா 57:17 எசே 22:12 எசே 33:31 மீகா 2:1 மீகா 2:2 மீகா 3:2 மீகா 3:3 மீகா 3:5 மீகா 3:11 செப் 3:3 செப் 3:4 லூக் 16:14 1தீமோ 3:3 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15 |
| 14 | அமைதியே இல்லாதபொழுது, “அமைதி, அமைதி” என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர். | எரே 8:11 எரே 8:12 எசே 13:10 |
| 15 | அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை: நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்: நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர். | எரே 3:3 எரே 8:12 ஏசா 3:9 |
| 16 | ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்: தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்: அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, “அவ்வழியே செல்ல மாட்டோம்” என்றார்கள். | எரே 18:15 உபா 32:7 உன்ன 1:7 உன்ன 1:8 ஏசா 8:20 மல்கி 4:4 லூக் 16:29 யோவா 5:39 யோவா 5:46 யோவா 5:47 அப் 17:11 ரோம 4:1-6 ரோம 4:12-6 எபிரெ 6:12 எபிரெ 11:2-40 எபிரெ 12:1 |
| 17 | நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். “எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்” என்றேன். அவர்களோ, “செவிசொடுக்க மாட்டோம்” என்றார்கள். | எரே 25:4 ஏசா 21:11 ஏசா 56:10 எசே 3:17-21 எசே 33:2-9 ஆபகூ 2:1 அப் 20:27-31 எபிரெ 13:17 |
| 18 | எனவே, நாடுகளே கேளுங்கள்: மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள். | எரே 4:10 எரே 31:10 உபா 29:24-28 சங் 50:4-6 ஏசா 5:3 மீகா 6:5 |
| 19 | நிலமே, நீயும் கேள்: இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை: என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள். | எரே 22:29 உபா 4:26 உபா 30:19 உபா 32:1 ஏசா 1:2 மீகா 6:2 |
| 20 | சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை. | சங் 40:6 சங் 50:7-13 சங் 50:16-13 சங் 50:17-13 சங் 66:3 ஏசா 1:11 ஏசா 66:3 எசே 20:39 ஆமோ 5:21 ஆமோ 5:22 மீகா 6:6-8 |
| 21 | ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்: அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர். | எரே 13:16 ஏசா 8:14 எசே 3:20 ரோம 9:33 ரோம 11:9 1பேது 2:8 |
| 22 | ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது. | எரே 6:1 எரே 1:14 எரே 1:15 எரே 5:15 எரே 10:22 எரே 25:9 எரே 50:41-43 |
| 23 | அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்: | எரே 5:16 எரே 50:42 ஏசா 13:18 எசே 23:22-25 ஆபகூ 1:6-10 |
| 24 | “அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம். | எரே 4:6-9 எரே 4:19-21 ஏசா 28:19 எசே 21:6 எசே 21:7 ஆபகூ 3:16 |
| 25 | வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில். | எரே 4:5 எரே 8:14 எரே 14:18 நியா 5:6 நியா 5:7 |
| 26 | மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்.” | எரே 6:14 எரே 4:11 எரே 8:19 எரே 8:21 எரே 8:22 எரே 9:1 எரே 14:17 ஏசா 22:4 புலம் 2:11 புலம் 3:48 புலம் 4:3 புலம் 4:6 புலம் 4:10 |
| 27 | நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்: நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய். | எரே 1:18 எரே 15:20 எசே 3:8-10 எசே 20:4 எசே 22:2 |
| 28 | அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்: பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்: அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்: அவர்களின் செயல்கள் கறைபட்டவை. | எரே 5:23 ஏசா 1:5 ஏசா 31:6 |
| 29 | துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன: காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை: ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை. | எரே 9:7 நீதி 17:3 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3 1பேது 1:7 1பேது 4:12 |
| 30 | அவர்கள் “தள்ளுபடியான வெள்ளி” என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார். | சங் 119:119 நீதி 25:4 ஏசா 1:22 ஏசா 1:25 எசே 22:18 எசே 22:19 மத் 5:13 |