39
திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.
40
ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய்.ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.
41
நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.
42
மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.
43
உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.