1ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்: ஏனெனில், நான் எளியவன்: வறியவன்.சங் 102:1 சங் 142:1 2என் உயிரைக் காத்தருளும்: ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்: உம் ஊழியனைக் காத்தருளும்: நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.சங் 4:3 சங் 37:28 சங் 119:94 1சாமு 2:9 யோவா 10:27-29 யோவா 17:11 1பேது 5:3-5 3என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.சங் 56:1 சங் 57:1 4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்: என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.சங் 51:12 ஏசா 61:3 ஏசா 65:18 ஏசா 66:13 ஏசா 66:14 5ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்: மன்னிப்பவர்: உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.சங் 86:15 சங் 25:8 சங் 36:7 சங் 52:1 சங் 69:16 சங் 119:68 சங் 130:7 சங் 145:8 சங் 145:9 யாத் 34:6 யோவே 2:13 1யோவா 4:8 1யோவா 4:9 6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்: உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.சங் 5:1 சங் 5:2 சங் 17:1 சங் 130:2 7என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.சங் 18:6 சங் 34:4-6 சங் 50:15 சங் 55:16-18 சங் 77:1 சங் 77:2 சங் 91:15 சங் 142:1 சங் 142:3 ஏசா 26:16 புலம் 3:55-57 யோனா 2:2 லூக் 22:44 எபிரெ 5:7 8என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை.சங் 89:6 சங் 89:8 யாத் 15:11 ஏசா 40:18 ஏசா 40:25 எரே 10:6 எரே 10:7 எரே 10:16 தானி 3:29 9என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்: உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.சங் 22:27-31 சங் 66:4 சங் 67:7 சங் 72:8 சங் 72:19 சங் 102:15 சங் 102:18 ஏசா 2:2-4 ஏசா 11:9 ஏசா 43:7 ஏசா 59:19 ஏசா 66:23 சகரி 14:9 ரோம 11:25 வெளிப் 11:15 வெளிப் 15:4 வெளிப் 20:3 10ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்: வியத்தகு செயல்கள் புரிபவர்: நீர் ஒருவரே கடவுள்!சங் 86:8 சங் 72:18 சங் 77:14 சங் 77:15 சங் 145:3-5 யாத் 15:11 யோபு 11:7 தானி 6:26 தானி 6:27 அப் 2:19-22 அப் 4:30 ரோம 15:18 ரோம 15:19 எபிரெ 2:4 11ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.சங் 5:8 சங் 25:4 சங் 25:12 சங் 27:11 சங் 119:33 சங் 119:73 சங் 143:8-10 யோபு 34:32 யோவா 6:45 யோவா 6:46 எபே 4:21 12என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்: என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.சங் 34:1 சங் 103:1-3 சங் 104:33 சங் 145:1-5 சங் 146:1 சங் 146:2 1நாளா 29:13 1நாளா 29:20 ஏசா 12:1 வெளிப் 5:9-13 வெளிப் 19:5 வெளிப் 19:6 13ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!சங் 57:10 சங் 103:8-12 சங் 108:4 லூக் 1:58 14கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்: கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது: அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.சங் 36:11 சங் 54:3 சங் 119:51 சங் 119:69 சங் 119:85 சங் 140:5 2சாமு 15:1-12 15என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்: அருள் மிகுந்தவர்: விரைவில் சினமுறாதவர்: பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.சங் 86:5 சங் 103:8 சங் 111:4 சங் 130:4 சங் 130:7 சங் 145:8 யாத் 31:6 யாத் 31:7 எண் 14:18 நெகே 9:17 யோவே 2:13 மீகா 7:18 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:7 எபே 2:4-7 16என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்: உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்: உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.சங் 25:16 சங் 69:16 சங் 90:13 சங் 119:132 17நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்: என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்: ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.சங் 41:10 சங் 41:11 சங் 74:9 ஏசா 38:22 1கொரி 5:5