1 | இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு: நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை: கடவுளை அறியும் அறிவும் இல்லை. | 1இரா 22:19 ஏசா 1:10 ஏசா 28:14 ஏசா 34:1 ஏசா 66:5 எரே 2:4 எரே 7:2 எரே 9:20 எரே 19:3 எரே 34:4 ஆமோ 7:16 வெளிப் 2:11 வெளிப் 2:29 |
2 | பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்: இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது. | ஏசா 24:5 ஏசா 48:1 ஏசா 59:2-8 ஏசா 59:12-15 எரே 5:1 எரே 5:2 எரே 5:7-9 எரே 5:26-9 எரே 5:27-9 எரே 6:7 எரே 7:6-10 எரே 9:2-8 எரே 23:10-14 எசே 22:2-13 எசே 22:25-30 மீகா 2:1-3 மீகா 3:2 மீகா 3:9 மீகா 6:10 மீகா 7:2 செப் 3:1 சகரி 5:3 சகரி 7:9 |
3 | ஆதலால் நாடு புலம்புகின்றது: அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன: காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன. | ஏசா 24:4-12 எரே 4:27 யோவே 1:10-13 ஆமோ 1:2 ஆமோ 5:16 ஆமோ 8:8 நாகூ 1:4 |
4 | ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்: எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்: உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள். | ஓசி 4:17 ஆமோ 5:13 ஆமோ 6:10 மத் 7:3-6 |
5 | பகலிலே நீ இடறி விழுவாய்: இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்: உன் தாயை நான் அழித்துவிடுவேன். | ஓசி 9:7 ஓசி 9:8 ஏசா 9:13-17 எரே 6:4 எரே 6:5 எரே 6:12-15 எரே 8:10-12 எரே 14:15 எரே 14:16 எரே 15:8 எரே 23:9 எசே 13:9-16 எசே 14:8-10 மீகா 3:5-7 சகரி 11:8 சகரி 13:2 |
6 | அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்: நீ அறிவைப் புறக்கணித்தாய்: நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்: நானும் உன் மக்களை மறந்து விடுவேன். | ஓசி 4:12 ஏசா 1:3 ஏசா 3:12 ஏசா 5:13 எரே 4:22 எரே 8:7 |
7 | எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்: அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன். | ஓசி 4:10 ஓசி 5:1 ஓசி 6:9 ஓசி 13:6 ஓசி 13:14 எஸ்றா 9:7 |
8 | என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்: அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள். | லேவி 6:26 லேவி 7:6 லேவி 7:7 |
9 | குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்: அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்: அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன். | ஏசா 9:14-16 ஏசா 24:2 எரே 5:31 எரே 8:10-12 எரே 23:11 எரே 23:12 எசே 22:26-31 மத் 15:14 |
10 | அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்: வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்: ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள். | லேவி 26:26 நீதி 13:25 ஏசா 65:13-16 மீகா 6:14 ஆகா 1:6 மல்கி 2:1-3 |
11 | மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும். | ஓசி 4:12 நீதி 6:32 நீதி 20:1 நீதி 23:27-35 பிரச 7:7 ஏசா 5:12 ஏசா 28:7 லூக் 21:34 ரோம 13:11-14 |
12 | என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்: அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது: விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர். | எரே 2:27 எரே 10:8 எசே 21:21 ஆபகூ 2:19 |
13 | மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்: குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்: ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்: உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள். | ஏசா 1:29 ஏசா 57:5 ஏசா 57:7 எரே 3:6 எரே 3:13 எசே 6:13 எசே 16:16 எசே 16:25 எசே 20:28 எசே 20:29 |
14 | உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்: ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்: தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்: அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள். | ஓசி 4:17 ஏசா 1:5 எபிரெ 12:8 |
15 | இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்: கில்காலுக்குள் நுழையாதீர்கள்: பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்: “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள். | ஓசி 4:12 எரே 3:6-10 எசே 23:4-8 |
16 | கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்: ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா? | ஓசி 11:7 1சாமு 15:11 எரே 3:6 எரே 3:8 எரே 3:11 எரே 5:6 எரே 7:24 எரே 8:5 எரே 14:7 சகரி 7:11 |
17 | எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு. | ஓசி 11:2 ஓசி 12:1 ஓசி 13:2 |
18 | குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்: தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள். | உபா 32:32 உபா 32:33 ஏசா 1:21 ஏசா 1:22 எரே 2:21 |
19 | காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்: அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள். | எரே 4:11 எரே 4:12 எரே 51:1 சகரி 5:9-11 |