1 | “அம்மீ” என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். “ருகாமா” என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள். | ஓசி 1:9-11 |
2 | “வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்: அவள் எனக்கு மனைவியுமல்ல: நான் அவளுக்குக் கணவனுமல்ல: அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும். | ஏசா 58:1 எரே 2:2 எரே 19:3 எசே 20:4 எசே 23:45 மத் 23:37-39 அப் 7:51-53 2கொரி 5:16 |
3 | இல்லாவிடில், நான் அவளைத் துகிலுரித்து திறந்தமேனியாக்குவேன்: பிறந்த நாளில் இருந்த கோலமாய் அவளை ஆக்குவேன்: பாலைநிலம்போல் ஆக்கி, வறண்ட நிலமாகச்செய்து தாக்கத்தினால் அவளைச் சாகடிப்பேன். | ஓசி 2:10 ஏசா 47:3 எரே 13:22 எரே 13:26 எசே 16:37-39 எசே 23:26-29 வெளிப் 17:16 |
4 | அவள் பிள்ளைகளுக்கும் நான் கருணை காட்டமாட்டேன்: ஏனெனில் அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள். | ஓசி 1:6 ஏசா 27:11 எரே 13:14 எரே 16:5 எசே 8:18 எசே 9:10 சகரி 1:12 ரோம 9:18 ரோம 11:22 யாக் 2:13 |
5 | அவர்களின் தாய் வேசியாய் வாழ்ந்தாள்: அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்: “எனக்கு உணவும் தண்ணீரும், ஆட்டு மயிரும் மணலும், எண்ணெயும் பானமும் தருகின்ற என் காதலரைப் பின் செல்வேன்” என்றாள். | ஓசி 2:2 ஓசி 3:1 ஓசி 4:5 ஓசி 4:12-15 ஏசா 1:21 ஏசா 50:1 எரே 2:20 எரே 2:25 எரே 3:1-9 எசே 16:15 எசே 16:16 எசே 16:28-34 எசே 23:5-11 வெளிப் 2:20-23 வெளிப் 17:1-5 |
6 | ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்: அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்: அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது. | யோபு 3:23 யோபு 19:8 புலம் 3:7-9 லூக் 15:14-16 லூக் 19:43 |
7 | அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்: ஆனால் அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள். அவர்களைத் தேடித் திரிவாள்: ஆனால் அவர்களைக் காணமாட்டாள். அப்போது அவள், “என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்: இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது” என்பாள். | ஓசி 5:13 2நாளா 28:20-22 ஏசா 30:2 ஏசா 30:3 ஏசா 30:16 ஏசா 31:1-3 எரே 2:28 எரே 2:36 எரே 2:37 எரே 30:12-15 எசே 20:32 எசே 23:22 |
8 | கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை. நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே பாகாலுக்குச் சிலை செய்தார்கள். | ஏசா 1:3 ஆபகூ 1:16 அப் 17:23-25 ரோம 1:28 |
9 | ஆதலால், நான் எனது கோதுமையை அதன் காலத்திலும், எனது திராட்சை இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்துக்கொள்வேன்: அவள் திறந்த மேனியை மறைக்க நான் கொடுத்திருந்த கம்பளி ஆடையையும் சணலாடையையும் பறித்துக் கொள்வேன். | தானி 11:13 யோவே 2:14 மல்கி 1:4 மல்கி 3:18 |
10 | இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன் அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்: என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை. | ஓசி 2:3 ஏசா 3:17 எரே 13:22 எரே 13:26 எசே 16:36 எசே 23:29 லூக் 12:2 லூக் 12:3 1கொரி 4:5 |
11 | அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும் அமாவாசைகளையும் ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன். | ஓசி 9:1-5 ஏசா 24:7-11 எரே 7:34 எரே 16:9 எரே 25:10 எசே 26:13 நாகூ 1:10 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
12 | “இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை” என்று அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், அத்தி மரங்களையும் பாழாக்குவேன்: அவற்றைக் காடாக்கிவிடுவேன்: காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும். | ஓசி 2:5 ஓசி 9:1 |
13 | பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில் அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்: வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்: இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன்” என்கிறார் ஆண்டவர். | ஓசி 9:7 ஓசி 9:9 யாத் 32:34 எரே 23:2 |
14 | “ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்: பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்: நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். | ஏசா 30:18 எரே 16:14 |
15 | அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்: ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்: அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள். | ஓசி 2:12 லேவி 26:40-45 உபா 30:3-5 நெகே 1:8 நெகே 1:9 ஏசா 65:21 எரே 32:15 எசே 28:26 ஆமோ 9:14 |
16 | அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்: 'என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர். | ஓசி 2:7 ஏசா 54:5 எரே 3:14 யோவா 3:29 2கொரி 11:2 எபே 5:25-27 வெளிப் 19:7 |
17 | அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்: இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள். | யாத் 23:13 யோசு 23:7 சங் 16:4 சகரி 13:2 |
18 | அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும், நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்: வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்: அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன். | ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 26:1 சகரி 2:11 சகரி 14:4 சகரி 14:9 |
19 | “இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்: நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன். | ஏசா 54:5 ஏசா 62:3-5 எரே 3:14 எரே 3:15 யோவா 3:29 ரோம 7:4 2கொரி 11:2 எபே 5:25-27 வெளிப் 19:7-9 வெளிப் 21:2 வெளிப் 21:9 வெளிப் 21:10 |
20 | மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்: ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய். | எரே 9:24 எரே 24:7 எரே 31:33 எரே 31:34 எசே 38:23 மத் 11:27 லூக் 10:22 யோவா 8:55 யோவா 17:3 2கொரி 4:6 பிலிப் 3:8 கொலோ 1:10 2தீமோ 1:12 எபிரெ 8:11 1யோவா 4:6 1யோவா 5:20 |
21 | மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்” என்கிறார் ஆண்டவர். “நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்: அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும். | ஏசா 65:24 சகரி 8:12 சகரி 13:9 மத் 6:33 ரோம 8:32 1கொரி 3:21-23 |
22 | நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும்” என்கிறார் ஆண்டவர். | ஓசி 1:4 ஓசி 1:11 |
23 | நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், “லோ ருகாமா” வுக்குக் கருணை காட்டுவேன்: “லோ அம்மீ” யை நோக்கி, “நீங்கள் என் மக்கள்” என்பேன்: அவனும் “நீரே என் கடவுள்” என்பான். | சங் 72:16 எரே 31:27 சகரி 10:9 அப் 8:1-4 யாக் 1:1 1பேது 1:1 1பேது 1:2 |