12
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது: உனது புண் புரையோடிப்போனது.
13
உனக்காக வாதிட எவனும் இல்லை: உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை: உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
14
உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்: உன்னை அவர்கள் தேடுவதே இல்லை: மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்: கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்: ஏனெனில் உனது குற்றம் பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை.
15
நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது: ஏனெனில் உனது குற்றமோ பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை: எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.