ஏசாயா 31:1-3 - WCV
1
துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்: பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்: இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை: ஆண்டவரைத் தேடுவதுமில்லை:
2
ஆனால் அவரோ ஞானமுடையவர்: தீங்கை வருவிப்பவர்: தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்: தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர்.
3
எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்ல: அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல: ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்: உதவி பெறுபவன் வீழ்வான்: அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.