| 1 | பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு: பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு: ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். | ஏசா 62:4 உன்ன 8:8 கலா 4:27 |
| 2 | உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு: உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு: உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு: உன் முளைகளை உறுதிப்படுத்து. | ஏசா 33:20 ஏசா 49:19 ஏசா 49:20 எரே 10:20 |
| 3 | வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்: உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்: பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர். | ஏசா 2:2-4 ஏசா 11:9-12 ஏசா 35:1 ஏசா 35:2 ஏசா 42:1-12 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 49:12 ஏசா 60:3-11 ஆதி 49:10 சங் 72:8-11 ரோம 9:25 ரோம 9:26 ரோம 10:18 ரோம 11:12 கொலோ 1:23 |
| 4 | அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்: வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்: உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய். | ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 45:16 ஏசா 45:17 ஏசா 61:7 1பேது 2:6 |
| 5 | ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,”படைகளின் ஆண்டவர்” என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்: “உலக முழுமைக்கும் கடவுள்” என அவர் அழைக்கப்படுகின்றார். | சங் 45:10-17 எரே 3:14 எசே 16:8 ஓசி 2:19 ஓசி 2:20 யோவா 3:29 2கொரி 11:2 2கொரி 11:3 எபே 5:25-27 எபே 5:32-27 |
| 6 | ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். | ஏசா 49:14 ஏசா 62:4 ஓசி 2:1 ஓசி 2:2 ஓசி 2:14 ஓசி 2:15 மத் 11:28 2கொரி 7:6 2கொரி 7:9 2கொரி 7:10 |
| 7 | நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்: ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். | ஏசா 26:20 ஏசா 60:10 சங் 30:5 2கொரி 4:17 2பேது 3:8 |
| 8 | பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்: ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். | ஏசா 47:6 ஏசா 57:16 ஏசா 57:17 சகரி 1:15 |
| 9 | எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது: நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்: அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். | ஏசா 12:1 ஏசா 55:11 ஆதி 8:21 ஆதி 9:11-16 சங் 104:9 எரே 31:35 எரே 31:36 எரே 33:20-26 எசே 39:20 எபிரெ 6:16-18 |
| 10 | மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது: என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். | ஏசா 51:6 ஏசா 51:7 சங் 46:2 மத் 5:18 மத் 16:18 மத் 24:35 ரோம 11:29 2பேது 3:10-13 |
| 11 | துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். | ஏசா 54:6 ஏசா 49:14 ஏசா 51:17-19 ஏசா 51:23-19 ஏசா 52:1-5 ஏசா 60:15 யாத் 2:23 யாத் 3:2 யாத் 3:7 உபா 31:17 சங் 34:19 சங் 129:1-3 எரே 30:17 யோவா 16:20-22 யோவா 16:33-22 அப் 14:22 வெளிப் 11:3-10 வெளிப் 12:13-17 |
| 12 | உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். |
| 13 | உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்: உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். | ஏசா 2:3 ஏசா 11:9 சங் 25:8-12 சங் 71:17 எரே 31:34 மத் 11:25-29 மத் 16:17 லூக் 10:21 லூக் 10:22 லூக் 24:45 யோவா 6:45 யோவா 14:26 1கொரி 2:10 எபே 4:21 1தெச 4:9 எபிரெ 8:10 1யோவா 2:20 1யோவா 2:27 |
| 14 | நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்: ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்: நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது. | ஏசா 1:26 ஏசா 45:24 ஏசா 52:1 ஏசா 60:21 ஏசா 61:10 ஏசா 61:11 ஏசா 62:1 எரே 31:23 எசே 36:27 எசே 36:28 எசே 37:23-26 யோவே 3:17-21 சகரி 8:3 2பேது 3:13 |
| 15 | எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால் அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்: உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான். | எசே 38:8-23 யோவே 3:9-14 வெளிப் 16:14 வெளிப் 19:19-21 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 16 | இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்: அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான். | ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:15 ஏசா 37:26 ஏசா 46:11 யாத் 9:16 நீதி 16:4 தானி 4:34 தானி 4:35 யோவா 19:11 |
| 17 | உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்: இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும். நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். | ஏசா 54:15 சங் 2:1-6 எசே 38:9 எசே 38:10 மத் 16:18 யோவா 10:28-30 ரோம 8:1 ரோம 8:28-39 |