1 | அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்: | லேவி 10:1-3 யோசு 6:1 மத் 13:47 மத் 13:48 யோவா 6:37 2தீமோ 2:20 |
2 | விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான். | யோசு 7:11 யோசு 7:12 2இரா 5:21-25 மல்கி 1:14 மல்கி 3:8 மல்கி 3:9 யோவா 12:6 1தீமோ 6:10 2பேது 2:14 2பேது 2:15 |
3 | அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? | ஆதி 3:13-17 1இரா 22:21 1இரா 22:22 1நாளா 21:1-3 மத் 4:3-11 மத் 13:19 லூக் 22:3 யோவா 13:2 யோவா 13:27 எபே 6:11-16 யாக் 4:7 1பேது 5:8 வெளிப் 12:9-11 |
4 | அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்” என்று கூறினார். | யாத் 35:21 யாத் 35:22 யாத் 35:29 1நாளா 29:3 1நாளா 29:5 1நாளா 29:9 1நாளா 29:17 1கொரி 8:8 1கொரி 9:5-17 பிலேமோ 1:14 |
5 | அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. | அப் 5:10 அப் 5:11 அப் 13:11 எண் 16:26-33 2இரா 1:10-14 2இரா 2:24 எரே 5:14 1கொரி 4:21 2கொரி 10:2-6 2கொரி 13:2 2கொரி 13:10 வெளிப் 11:5 |
6 | இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். | லேவி 10:4-6 உபா 21:23 2சாமு 18:17 யோவா 19:40 |
7 | ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்: நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது. |
8 | பேதுரு அவளைப் பார்த்து,”நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள். |
9 | மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, “தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்” என்றார். | ஆதி 3:9-13 லூக் 16:2 ரோம 3:19 |
10 | உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள். |
11 | திருச்சபையார் யாவரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது. | அப் 5:5 அப் 19:17 சங் 89:7 எரே 32:40 1கொரி 10:11 1கொரி 10:12 பிலிப் 2:12 எபிரெ 4:1 எபிரெ 11:7 எபிரெ 12:15 எபிரெ 12:28 1பேது 1:17 வெளிப் 15:4 |
12 | மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். | அப் 2:43 அப் 3:6 அப் 3:7 அப் 4:30 அப் 4:33 அப் 9:33 அப் 9:40 அப் 14:3 அப் 14:8-10 அப் 16:18 அப் 19:11 மாற் 16:17 மாற் 16:18 மாற் 16:20 ரோம 15:19 2கொரி 12:12 எபிரெ 2:4 |
13 | மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். | அப் 5:5 எண் 17:12 எண் 17:13 எண் 24:8-10 1சாமு 16:4 1சாமு 16:5 1இரா 17:18 ஏசா 33:14 லூக் 12:1 லூக் 12:2 லூக் 14:26-35 யோவா 9:22 யோவா 12:42 யோவா 19:38 2பேது 2:20-22 |
14 | ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். | அப் 2:41 அப் 2:47 அப் 4:4 அப் 6:7 அப் 9:31 அப் 9:35 அப் 9:42 ஏசா 44:3-5 ஏசா 45:24 ஏசா 55:11-13 |
15 | பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்: | அப் 19:11 அப் 19:12 மத் 9:21 மத் 14:36 யோவா 14:12 |
16 | எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர். | மத் 4:24 மத் 8:16 மத் 15:30 மத் 15:31 மாற் 2:3 மாற் 2:4 மாற் 6:54-56 யோவா 14:12 |
17 | தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து | அப் 4:26 சங் 2:1-3 யோவா 11:47-49 யோவா 12:10 யோவா 12:19 |
18 | திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். | அப் 4:3 அப் 8:3 அப் 12:5-7 அப் 16:23-27 லூக் 21:12 2கொரி 11:23 எபிரெ 11:36 வெளிப் 2:10 |
19 | ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச் சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, | அப் 12:7-11 அப் 16:26 சங் 34:7 சங் 105:17-20 சங் 146:7 ஏசா 61:1 |
20 | “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். | ஏசா 58:1 எரே 7:2 எரே 19:14 எரே 19:15 எரே 20:2 எரே 20:3 எரே 22:1 எரே 22:2 எரே 26:2 எரே 36:10 மத் 21:23 யோவா 18:20 |
21 | இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள். | அப் 5:25 லூக் 21:37 லூக் 21:38 யோவா 8:2 |
22 | அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, |
23 | “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள். | அப் 5:19 சங் 2:4 சங் 33:10 நீதி 21:30 புலம் 3:37 புலம் 3:55-58 தானி 3:11-25 தானி 6:22-24 மத் 27:63-66 மத் 28:12-15 யோவா 8:59 |
24 | இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். | அப் 5:26 அப் 4:1 லூக் 22:4 லூக் 22:52 |
25 | அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். |
26 | உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவாhகள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை. | அப் 5:13 மத் 14:5 மத் 21:26 மத் 26:5 லூக் 20:6 லூக் 20:19 லூக் 22:2 |
27 | அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, | அப் 4:7 அப் 6:12 அப் 22:30 அப் 23:1 லூக் 22:66 |
28 | “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். | அப் 5:40 அப் 4:18-21 |
29 | அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? | அப் 4:19 ஆதி 3:17 1சாமு 15:24 மாற் 7:7-9 வெளிப் 14:8-12 |
30 | நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். | அப் 3:13-15 அப் 22:14 1நாளா 12:17 1நாளா 29:18 எஸ்றா 7:27 லூக் 1:55 லூக் 1:72 |
31 | இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். | அப் 2:33 அப் 2:36 அப் 4:11 சங் 89:19 சங் 89:24 சங் 110:1 சங் 110:2 எசே 17:24 மத் 28:18 எபே 1:20-23 பிலிப் 2:9-11 எபிரெ 2:10 எபிரெ 12:2 1பேது 3:22 |
32 | இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர். | அப் 5:29 அப் 1:8 அப் 2:32 அப் 10:39-41 அப் 13:31 லூக் 24:47 லூக் 24:48 யோவா 15:27 2கொரி 13:1 எபிரெ 2:3 |
33 | இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். | அப் 2:37 அப் 7:54 அப் 22:22 லூக் 4:28 லூக் 4:29 லூக் 6:11 லூக் 11:50-54 லூக் 19:45-48 லூக் 20:19 |
34 | அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, | அப் 23:7-9 சங் 76:10 யோவா 7:50-53 |
35 | அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். | அப் 19:36 அப் 22:26 எரே 26:19 மத் 27:19 |
36 | சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. | அப் 8:9 மத் 24:24 2தெச 2:3-7 2பேது 2:18 யூதா 1:16 வெளிப் 17:3 வெளிப் 17:5 |
37 | இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்: அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். | லூக் 2:1 லூக் 13:1 |
38 | ஆகவே இப்போது நீங்கள் இம் மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். | அப் 5:35 யோவா 11:48 |
39 | அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது: நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். | அப் 6:10 ஆதி 24:50 2சாமு 5:2 1இரா 12:24 யோபு 34:29 ஏசா 43:13 ஏசா 46:10 தானி 4:35 மத் 16:18 லூக் 21:15 1கொரி 1:25 வெளிப் 17:12-14 |
40 | பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். | அப் 4:18 |
41 | இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். | அப் 16:23-25 ஏசா 61:10 ஏசா 65:14 ஏசா 66:5 மத் 5:10-12 லூக் 6:22 ரோம 5:3 2கொரி 12:10 பிலிப் 1:29 எபிரெ 10:34 யாக் 1:2 1பேது 4:13-16 |
42 | அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள். | அப் 5:20 அப் 5:21 அப் 2:46 அப் 3:1 அப் 3:2-10 லூக் 21:37 லூக் 22:53 2தீமோ 4:2 |