1 | கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: | அப் 13:9 அப் 21:40 அப் 22:7 அப் 22:13 அப் 26:1 அப் 26:14 |
2 | நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். | லூக் 24:26 லூக் 24:27 அப் 10:43 அப் 26:6 தீத் 1:2 |
3 | இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்: | ரோம 1:9 ரோம 8:2 ரோம 8:3 ரோம 8:29-32 சங் 2:7 மத் 3:17 மத் 26:63 மத் 27:43 லூக் 1:35 யோவா 1:34 யோவா 1:49 யோவா 3:16-18 யோவா 3:35-18 யோவா 3:36-18 யோவா 5:25 யோவா 10:30 யோவா 10:36 யோவா 20:28 யோவா 20:31 அப் 3:13 அப் 8:37 அப் 9:20 1கொரி 1:9 கலா 4:4 கொலோ 1:13-15 1தெச 1:10 1யோவா 1:3 1யோவா 3:8 1யோவா 3:23 1யோவா 4:9 1யோவா 4:10 1யோவா 4:15 1யோவா 5:1 1யோவா 5:5 1யோவா 5:10-13 1யோவா 5:20-13 வெளிப் 2:18 |
4 | தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. | ரோம 1:3 யோவா 2:18-21 அப் 2:24 அப் 2:32 அப் 3:15 அப் 4:10-12 அப் 5:30-32 அப் 13:33-35 அப் 17:31 2கொரி 13:4 எபே 1:19-23 எபிரெ 5:5 எபிரெ 5:6 வெளிப் 1:18 |
5 | பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். | ரோம 12:3 ரோம 15:15 ரோம 15:16 யோவா 1:16 1கொரி 15:10 2கொரி 3:5 2கொரி 3:6 கலா 1:15 கலா 1:16 எபே 3:2-9 1தீமோ 1:11 1தீமோ 1:12 |
6 | பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள். | எபே 1:11 கொலோ 1:6 கொலோ 1:21 |
7 | நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! | அப் 15:23 1கொரி 1:2 2கொரி 1:1 பிலிப் 1:1 கொலோ 1:2 யாக் 1:1 1பேது 1:1 1பேது 1:2 யூதா 1:1 வெளிப் 2:1 வெளிப் 2:8 வெளிப் 2:12 வெளிப் 2:18 வெளிப் 2:29 வெளிப் 3:1 வெளிப் 3:7 வெளிப் 3:14 வெளிப் 3:22 |
8 | முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது. | ரோம 6:17 |
9 | தம் திருமகனைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியின் மூலம் நான் உளமார வழிபட்டுவரும் கடவுள் சாட்சியாய்ச் சொல்கிறேன்: உங்களை நினைவுகூர்ந்து, | ரோம 9:1 யோபு 16:19 2கொரி 1:23 2கொரி 11:10 2கொரி 11:11 2கொரி 11:31 கலா 1:20 பிலிப் 1:8 1தெச 2:5-10 1தீமோ 2:7 |
10 | உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன். கடவுளின் திருவுளத்தால் நான் உங்களிடம் வருவதற்கு இப்பொழுதாவது இறுதியாக ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடி வருகிறேன். | ரோம 15:22-24 ரோம 15:30-32 பிலிப் 4:6 1தெச 2:18 1தெச 3:10 1தெச 3:11 பிலேமோ 1:22 எபிரெ 13:19 |
11 | நான் உங்களைக் காண ஏங்குகிறேன்: அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்க வேண்டுமென விழைகிறேன். | ரோம 15:23 ரோம 15:32 ஆதி 31:30 2சாமு 13:39 2சாமு 23:15 2கொரி 9:14 பிலிப் 1:8 பிலிப் 2:26 பிலிப் 4:1 |
12 | நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் நானும், நான் கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன். | ரோம 15:24 ரோம 15:32 அப் 11:23 2கொரி 2:1-3 2கொரி 7:4-7 2கொரி 7:13-7 1தெச 2:17-20 1தெச 3:7-10 2தீமோ 1:4 2யோவா 1:4 3யோவா 1:3 3யோவா 1:4 |
13 | பிற மக்களிடையே நான் செய்த பணியால் பயன்விளைந்தது. அதுபோல உங்களிடையேயும் சிறிதளவாவது பயன்விளையும் முறையில் பணியாற்ற விரும்பி உங்களிடம் வர பன்முறை திட்டமிட்டேன்: ஆயினும் இன்று வரை தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சகோதர சகோதரிகளே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன். | ரோம 11:25 1கொரி 10:1 1கொரி 12:1 2கொரி 1:8 1தெச 4:13 |
14 | கிரேக்கருக்கும் கிரேக்கரல்லாதார்க்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். | ரோம 8:12 ரோம 13:8 அப் 9:15 அப் 13:2-4 அப் 22:21 அப் 26:17 அப் 26:18 1கொரி 9:16-23 2தீமோ 2:10 |
15 | ஆதலால்தான் உரோமையராகிய உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன். | ரோம 12:18 1இரா 8:18 மாற் 14:8 2கொரி 8:12 |
16 | நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்: ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும்- அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும்-அந்த மீட்பு உண்டு. | சங் 40:9 சங் 40:10 சங் 71:15 சங் 71:16 சங் 119:46 மாற் 8:38 லூக் 9:26 1கொரி 2:2 2தீமோ 1:8 2தீமோ 1:12 2தீமோ 1:16 1பேது 4:16 |
17 | ஏனெனில்”நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. | ரோம 3:21 |
18 | இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது: ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். | ரோம 4:15 |
19 | கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று: அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். | ரோம 1:20 சங் 19:1-6 ஏசா 40:26 எரே 10:10-13 அப் 14:16 அப் 17:23-30 |
20 | ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. | யோவா 1:18 கொலோ 1:15 1தீமோ 1:17 1தீமோ 6:16 எபிரெ 11:27 |
21 | ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. | ரோம 1:19 ரோம 1:28 யோவா 3:19 |
22 | தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. | ரோம 11:25 நீதி 25:14 நீதி 26:12 ஏசா 47:10 எரே 8:8 எரே 8:9 எரே 10:14 மத் 6:23 1கொரி 1:19-21 1கொரி 3:18 1கொரி 3:19 |
23 | அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். | ரோம 1:25 சங் 106:20 எரே 2:11 |
24 | ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். | சங் 81:11 சங் 81:12 ஓசி 4:17 ஓசி 4:18 மத் 15:14 அப் 7:42 அப் 14:16 அப் 17:29 அப் 17:30 எபே 4:18 2தெச 2:10-12 |
25 | அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்: படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்: படைத்தவரை மறந்தார்கள்: அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென். | ரோம 1:18 1தெச 1:9 1யோவா 5:20 |
26 | ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். | ஆதி 19:5 லேவி 18:22-28 உபா 23:17 உபா 23:18 நியா 19:22 1கொரி 6:9 எபே 4:19 எபே 5:12 1தீமோ 1:10 யூதா 1:7 யூதா 1:10 |
27 | அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள். | ரோம 1:23 ரோம 1:24 |
28 | கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார். | ரோம 1:18 ரோம 1:21 யோபு 21:14 யோபு 21:15 நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 5:12 நீதி 5:13 நீதி 17:16 எரே 4:22 எரே 9:6 ஓசி 4:6 அப் 17:23 அப் 17:32 ரோம 8:7 ரோம 8:8 1கொரி 15:34 2கொரி 4:4-6 2கொரி 10:5 2தெச 1:8 2தெச 2:10-12 2பேது 3:5 |
29 | இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள், | ரோம 3:10 |
30 | அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்: | நீதி 25:23 |
31 | சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். | ரோம 1:20 ரோம 1:21 ரோம 3:11 நீதி 18:2 ஏசா 27:11 எரே 4:22 மத் 15:16 |
32 | இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்: தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள். | ரோம 1:18 ரோம 1:21 ரோம 2:1-5 ரோம 2:21-23 |