அப்போஸ்தலர் 13:33-35 - WCV
33
இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது.
34
மேலும் இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதுபற்றித்தான் “நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுள்ளும் தருவேன்” என்றும் கூறியிருக்கிறார்.
35
எனவே இன்னோர் இடத்தில் அவர், “உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்” என்றும் சொல்லியிருக்கிறார்.