1 | தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். | லூக் 1:24 |
2 | விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். | அப் 1:9 மாற் 16:19 லூக் 9:51 லூக் 24:51 யோவா 6:62 யோவா 13:1 யோவா 13:3 யோவா 16:28 யோவா 17:13 யோவா 20:17 எபே 4:8-10 1தீமோ 3:16 எபிரெ 6:19 எபிரெ 6:20 எபிரெ 9:24 1பேது 3:22 |
3 | இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். | அப் 13:31 மத் 28:9 மத் 28:16 மாற் 16:10-14 லூக் 24:1-53 யோவா 20:1-21 1கொரி 15:5-7 1யோவா 1:1 |
4 | அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். | அப் 10:41 லூக் 24:41-43 |
5 | யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்” என்று கூறினார். | அப் 11:15 அப் 19:4 மத் 3:11 லூக் 3:16 யோவா 1:31 1கொரி 12:13 தீத் 3:5 |
6 | பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். | மத் 24:3 யோவா 21:21 |
7 | அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: | அப் 17:26 உபா 29:29 தானி 2:21 மத் 24:36 மாற் 13:32 லூக் 21:24 எபே 1:10 1தெச 5:1 1தெச 5:2 1தீமோ 6:15 2தீமோ 3:1 |
8 | ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார். | அப் 2:1-4 அப் 6:8 அப் 8:19 மீகா 3:8 சகரி 4:6 லூக் 10:19 வெளிப் 11:3-6 |
9 | இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. | அப் 1:2 சங் 68:18 மாற் 16:19 லூக் 24:50 லூக் 24:51 யோவா 6:62 எபே 4:8-12 |
10 | அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, | 2இரா 2:11 2இரா 2:12 |
11 | “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர். | அப் 2:7 அப் 13:31 மாற் 14:70 |
12 | பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. | சகரி 14:4 மத் 21:1 மத் 24:3 மத் 26:30 லூக் 21:37 லூக் 24:52 |
13 | பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். | அப் 9:37-39 அப் 20:8 மாற் 14:15 லூக் 22:12 |
14 | அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். | அப் 2:1 அப் 2:42 அப் 2:46 அப் 4:24-31 அப் 6:4 மத் 18:19 மத் 18:20 மத் 21:22 லூக் 11:13 லூக் 18:1 லூக் 24:53 எபே 6:18 |
15 | அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: | சங் 32:5 சங் 32:6 சங் 51:9-13 லூக் 22:32 யோவா 21:15-17 |
16 | “அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. | அப் 2:29 அப் 2:37 அப் 7:2 அப் 13:15 அப் 13:26 அப் 13:38 அப் 15:7 அப் 15:13 அப் 22:1 அப் 23:1 அப் 23:6 அப் 28:17 |
17 | அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். | மத் 10:4 மாற் 3:19 லூக் 6:16 லூக் 22:47 யோவா 6:70 யோவா 6:71 யோவா 17:12 |
18 | அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின. | மத் 27:3-10 |
19 | இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் “அக்கலிதமா” என வழங்குகின்றார்கள். அதற்கு “இரத்தநிலம்” என்பது பொருள். | அப் 2:22 மத் 28:15 |
20 | திருப்பாடல்கள் நூலில், “அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!” என்றும் “அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!” என்றும் எழுதப்பட்டுள்ளது. | அப் 13:33 லூக் 20:42 லூக் 24:44 |
21 | ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. | லூக் 10:1 லூக் 10:2 யோவா 15:27 |
22 | யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.” | அப் 13:24 அப் 13:25 மத் 3:1-17 மாற் 1:1 மாற் 1:3-8 லூக் 3:1-18 யோவா 1:28-51 |
23 | அத்தகையோருள், இருவரை முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா. | அப் 15:22 |
24 | பின்பு அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான். | அப் 13:2 அப் 13:3 நீதி 3:5 நீதி 3:6 லூக் 6:12 லூக் 6:13 |
25 | அந்த யூதாசுக்கு பாதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். | அப் 1:17 அப் 1:20 |
26 | அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். | அப் 13:19 லேவி 16:8 யோசு 18:10 1சாமு 14:41 1சாமு 14:42 1நாளா 24:5 நீதி 16:22 யோனா 1:7 |