சங்கீதம் 51:9-13 - WCV
9
என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்: என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்: உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12
உம் மீட்பின் மகிழ்ச்சயை மீண்டும் எனக்கு அளித்தருளும்: தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்: பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.