1 | தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது: | யோவா 1:2 ஆதி 1:1 நீதி 8:22-31 எபே 3:9 கொலோ 1:17 எபிரெ 1:10 எபிரெ 7:3 எபிரெ 13:8 வெளிப் 1:2 வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 2:8 வெளிப் 21:6 வெளிப் 22:13 |
2 | வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். |
3 | அனைத்தும் அவரால் உண்டாயின: உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. | யோவா 1:10 யோவா 5:17-19 ஆதி 1:1 ஆதி 1:26 சங் 33:6 சங் 102:25 ஏசா 45:12 ஏசா 45:18 எபே 3:9 கொலோ 1:16 கொலோ 1:17 எபிரெ 1:2 எபிரெ 1:3 எபிரெ 1:10-12 எபிரெ 3:3 எபிரெ 3:4 வெளிப் 4:11 |
4 | அவரிடம் வாழ்வு இருந்தது: அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. | யோவா 5:21 யோவா 5:26 யோவா 11:25 யோவா 14:6 1கொரி 15:45 கொலோ 3:4 1யோவா 1:2 1யோவா 5:11 வெளிப் 22:1 |
5 | அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது: இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. | யோவா 1:10 யோவா 3:19 யோவா 3:20 யோவா 12:36-40 யோபு 24:13-17 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 ரோம 1:28 1கொரி 2:14 |
6 | கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான். | யோவா 1:33 யோவா 3:28 ஏசா 40:3-5 மல்கி 3:1 மல்கி 4:5 மல்கி 4:6 மத் 3:1-11 மத் 11:10 மத் 21:25 மாற் 1:1-8 லூக் 1:15-17 லூக் 1:76-17 லூக் 3:2-20 அப் 13:24 |
7 | அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். | யோவா 1:19 யோவா 1:26 யோவா 1:27 யோவா 1:32-34 யோவா 1:36-34 யோவா 3:26-36 யோவா 5:33-35 அப் 19:4 |
8 | அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். | யோவா 1:20 யோவா 3:28 அப் 19:4 |
9 | அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. | யோவா 1:4 யோவா 6:32 யோவா 14:6 யோவா 15:1 ஏசா 49:6 மத் 6:23 1யோவா 1:8 1யோவா 2:8 1யோவா 5:20 |
10 | ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. | யோவா 1:18 யோவா 5:17 ஆதி 11:6-9 ஆதி 16:13 ஆதி 17:1 ஆதி 18:33 யாத் 3:4-6 அப் 14:17 அப் 17:24-27 எபிரெ 1:3 |
11 | அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. | மத் 15:24 அப் 3:25 அப் 3:26 அப் 13:26 அப் 13:26 அப் 13:46 ரோம 9:1 ரோம 9:5 ரோம 15:8 கலா 4:4 |
12 | அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். | மத் 10:40 மத் 18:5 கொலோ 2:6 |
13 | அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல: மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். | யோவா 3:3 யோவா 3:5 யாக் 1:18 1பேது 1:3 1பேது 1:23 1பேது 2:2 1யோவா 3:9 1யோவா 4:7 1யோவா 5:1 1யோவா 5:4 1யோவா 5:18 |
14 | வாக்கு மனிதர் ஆனார்: நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். | யோவா 1:1 ஏசா 7:14 மத் 1:16 மத் 1:20-23 லூக் 1:31-35 லூக் 2:7 லூக் 2:11 ரோம 1:3 ரோம 1:4 ரோம 9:5 1கொரி 15:47 கலா 4:4 பிலிப் 2:6-8 1தீமோ 3:16 எபிரெ 2:11 எபிரெ 2:14-17 எபிரெ 10:5 1யோவா 4:2 1யோவா 4:3 2யோவா 1:7 |
15 | யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். | யோவா 1:7 யோவா 1:8 யோவா 1:29-34 யோவா 3:26-36 யோவா 5:33-36 மத் 3:11 மத் 3:13-17 மாற் 1:7 லூக் 3:16 |
16 | இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். | யோவா 3:34 யோவா 15:1-5 மத் 3:11 மத் 3:14 லூக் 21:15 அப் 3:12-16 ரோம 8:9 1கொரி 1:4 1கொரி 1:5 எபே 4:7-12 கொலோ 1:19 கொலோ 2:3 கொலோ 2:9 கொலோ 2:10 1பேது 1:11 |
17 | திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது: அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. | யோவா 5:45 யோவா 9:29 யாத் 20:1-17 உபா 4:44 உபா 5:1 உபா 33:4 அப் 7:38 அப் 28:23 ரோம 3:19 ரோம 3:20 ரோம 5:20 ரோம 5:21 2கொரி 3:7-10 கலா 3:10-13 கலா 3:17-13 எபிரெ 3:5 எபிரெ 3:6 எபிரெ 8:8-12 |
18 | கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை: தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். | யோவா 6:46 யாத் 33:20 உபா 4:12 மத் 11:27 லூக் 10:22 கொலோ 1:15 1தீமோ 1:17 1தீமோ 6:16 1யோவா 4:12 1யோவா 4:20 |
19 | எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். | யோவா 5:33-36 உபா 17:9-11 உபா 24:8 மத் 21:23-32 லூக் 3:15-18 |
20 | இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். | யோவா 3:28-36 மத் 3:11 மத் 3:12 மாற் 1:7 மாற் 1:8 லூக் 3:15-17 |
21 | அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். | மல்கி 4:5 மத் 11:14 மத் 17:10-12 லூக் 1:17 |
22 | அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்: எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். | 2சாமு 24:13 |
23 | அதற்கு அவர், 'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார். | யோவா 3:28 மத் 3:3 மாற் 1:3 லூக் 1:16 லூக் 1:17 லூக் 1:76-79 லூக் 3:4-6 |
24 | பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் | யோவா 3:1 யோவா 3:2 யோவா 7:47-49 மத் 23:13-15 மத் 23:26-15 லூக் 7:30 லூக் 11:39-44 லூக் 11:53-44 லூக் 16:14 அப் 23:8 அப் 26:5 பிலிப் 3:5 பிலிப் 3:6 |
25 | அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். | மத் 21:23 அப் 4:5-7 அப் 5:28 |
26 | யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்: | மத் 3:11 மாற் 1:8 லூக் 3:16 அப் 1:5 அப் 11:16 |
27 | அவர் எனக்குப்பின் வருபவர்: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். | யோவா 1:15 யோவா 1:30 அப் 19:4 |
28 | இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். | யோவா 10:40 நியா 7:24 |
29 | மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். | யோவா 1:36 ஆதி 22:7 ஆதி 22:8 யாத் 12:3-13 எண் 28:3-10 ஏசா 53:7 அப் 8:32 1பேது 1:19 வெளிப் 5:6 வெளிப் 5:8 வெளிப் 5:12 வெளிப் 5:13 வெளிப் 6:1 வெளிப் 6:16 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 7:14 வெளிப் 7:17 வெளிப் 12:11 வெளிப் 13:8 வெளிப் 14:1 வெளிப் 14:4 வெளிப் 14:10 வெளிப் 15:3 வெளிப் 17:14 வெளிப் 19:7 வெளிப் 19:9 வெளிப் 21:9 வெளிப் 21:14 வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 21:27 வெளிப் 22:1-3 |
30 | எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். | யோவா 1:15 யோவா 1:27 லூக் 3:16 |
31 | இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்: தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார். | யோவா 1:33 லூக் 1:80 லூக் 2:39-42 |
32 | தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். | யோவா 5:32 மத் 3:16 மாற் 1:10 லூக் 3:22 |
33 | இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் “தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்” என்று என்னிடம் சொல்லியிருந்தார். | யோவா 1:31 மத் 3:13-15 |
34 | நானும் கண்டேன்: இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.” | யோவா 1:18 யோவா 1:49 யோவா 3:16-18 யோவா 3:35-18 யோவா 3:36-18 யோவா 5:23-27 யோவா 6:69 யோவா 10:30 யோவா 10:36 யோவா 11:27 யோவா 19:7 யோவா 20:28 யோவா 20:31 சங் 2:7 சங் 89:26 சங் 89:27 மத் 3:17 மத் 4:3 மத் 4:6 மத் 8:29 மத் 11:27 மத் 16:16 மத் 17:5 மத் 26:63 மத் 27:40 மத் 27:43 மத் 27:54 மாற் 1:1 மாற் 1:11 லூக் 1:35 லூக் 3:22 ரோம 1:4 2கொரி 1:19 எபிரெ 1:1 எபிரெ 1:2 எபிரெ 1:5 எபிரெ 1:6 எபிரெ 7:3 1யோவா 2:23 1யோவா 3:8 1யோவா 4:9 1யோவா 4:14 1யோவா 4:15 1யோவா 5:9-13 1யோவா 5:20-13 2யோவா 1:9 வெளிப் 2:18 |
35 | மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். | யோவா 3:25 யோவா 3:26 மல்கி 3:16 |
36 | இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார். | யோவா 1:29 ஏசா 45:22 ஏசா 65:1 ஏசா 65:2 எபிரெ 12:2 1பேது 1:19 1பேது 1:20 |
37 | அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். | யோவா 1:43 யோவா 4:39-42 நீதி 15:23 சகரி 8:21 ரோம 10:17 எபே 4:29 வெளிப் 22:17 |
38 | இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,”என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். | லூக் 14:25 லூக் 15:20 லூக் 19:5 லூக் 22:61 |
39 | அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்”என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். | யோவா 1:46 யோவா 6:37 யோவா 14:22 யோவா 14:23 நீதி 8:17 மத் 11:28-30 |
40 | யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்”அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். | யோவா 6:8 மத் 4:18 மத் 10:2 அப் 1:13 |
41 | அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். “மெசியா” என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். | யோவா 1:36 யோவா 1:37 யோவா 1:45 யோவா 4:28 யோவா 4:29 2இரா 7:9 ஏசா 2:3-5 லூக் 2:17 லூக் 2:38 அப் 13:32 அப் 13:33 1யோவா 1:3 |
42 | பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி “கேபா” எனப்படுவாய் என்றார். “கேபா” என்றால் “பாறை” என்பது பொருள். | யோவா 1:47 யோவா 1:48 யோவா 2:24 யோவா 2:25 யோவா 6:70 யோவா 6:71 யோவா 13:18 |
43 | மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார். | ஏசா 65:1 மத் 4:18-21 மத் 9:9 லூக் 19:10 பிலிப் 3:12 1யோவா 4:19 |
44 | பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். | யோவா 12:21 யோவா 14:8 யோவா 14:9 மத் 10:3 மாற் 3:18 லூக் 6:14 அப் 1:13 |
45 | பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். | யோவா 21:2 |
46 | அதற்கு நத்தனியேல்,”நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார். | யோவா 7:41 யோவா 7:42 யோவா 7:52 லூக் 4:28 லூக் 4:29 |
47 | நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். | யோவா 8:31 யோவா 8:39 ரோம 2:28 ரோம 2:29 ரோம 9:6 பிலிப் 3:3 |
48 | நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். | யோவா 2:25 ஆதி 32:24-30 சங் 139:1 சங் 139:2 ஏசா 65:24 மத் 6:6 1கொரி 4:5 1கொரி 14:25 வெளிப் 2:18 வெளிப் 2:19 |
49 | நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்: நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார். | யோவா 1:18 யோவா 1:34 யோவா 20:28 யோவா 20:29 மத் 14:33 |
50 | அதற்கு இயேசு,”உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். | யோவா 20:29 லூக் 1:45 லூக் 7:9 |
51 | மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார். | யோவா 3:3 யோவா 3:5 யோவா 5:19 யோவா 5:24 யோவா 5:25 யோவா 6:26 யோவா 6:32 யோவா 6:47 யோவா 6:53 யோவா 8:34 யோவா 8:51 யோவா 8:58 யோவா 10:1 யோவா 10:7 யோவா 12:24 யோவா 13:16 யோவா 13:20 யோவா 13:21 யோவா 13:38 யோவா 14:12 யோவா 16:20 யோவா 16:23 யோவா 21:18 |