லூக்கா 1:15-17 - WCV
15
அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்: திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்: தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.
16
அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
17
எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்: தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்: நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்: இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.