இணை வசன வேதாகமம்

யோவான் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.யோவா 1:43
2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.மத் 12:19 லூக் 7:34-38 1கொரி 7:39 1கொரி 10:31 கொலோ 3:17 வெளிப் 3:20
3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.சங் 104:15 பிரச 10:19 ஏசா 24:11 மத் 26:28
4இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.யோவா 19:26 யோவா 19:27 யோவா 20:13 யோவா 20:15 மத் 15:28
5இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.யோவா 15:14 ஆதி 6:22 நியா 13:14 லூக் 5:5 லூக் 5:6 லூக் 6:46-49 அப் 9:6 எபிரெ 5:9 எபிரெ 11:8
6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.யோவா 3:25 மாற் 7:2-5 எபே 5:26 எபிரெ 6:2 எபிரெ 9:10 எபிரெ 9:19 எபிரெ 10:22
7இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.யோவா 2:3 யோவா 2:5 எண் 21:6-9 யோசு 6:3-5 1இரா 17:13 2இரா 4:2-6 2இரா 5:10-14 மாற் 11:2-6 மாற் 14:12-17 அப் 8:26-40
8பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.யோவா 2:9 நீதி 3:5 நீதி 3:6 பிரச 9:6
9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை: தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,யோவா 4:46
10“எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்: யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.ஆதி 43:34 உன்ன 5:1
11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.யோவா 1:17 யாத் 4:9 யாத் 7:19-21 பிரச 9:7 மல்கி 2:2 2கொரி 4:17 கலா 3:10-13
12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களையும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.யோவா 6:17 மத் 4:13 மத் 11:23
13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்:யோவா 2:23 யோவா 5:1 யோவா 6:4 யோவா 11:55 யாத் 12:6-14 எண் 28:16-25 உபா 16:1-8 உபா 16:16-8 லூக் 2:41
14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்:உபா 14:23-26 மத் 21:12 மாற் 11:15 லூக் 19:45 லூக் 19:46
15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்: ஆடு மாடுகளையும் விரட்டினார்: நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.யோவா 18:6 சகரி 4:6 2கொரி 10:4
16அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார்.ஏசா 56:5-11 எரே 7:11 ஓசி 12:7 ஓசி 12:8 மத் 21:13 மாற் 11:17 அப் 19:24-27 1தீமோ 6:5 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15
17அப்போது அவருடைய சீடர்கள். “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.சங் 69:9 சங் 119:139
18யூதர்கள் அவரைப் பார்த்து,”இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.யோவா 6:30 மத் 12:38-42 மத் 16:1-4 மாற் 8:11 லூக் 11:29
19இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார்.மத் 26:60 மத் 26:61 மத் 27:40 மாற் 14:58 மாற் 15:29
20அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள்.
21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.யோவா 1:14 கொலோ 1:19 கொலோ 2:9 எபிரெ 8:2
22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.யோவா 2:17 யோவா 12:16 யோவா 14:26 யோவா 16:4 லூக் 24:7 லூக் 24:8 லூக் 24:44 அப் 11:16
23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.யோவா 3:2 யோவா 6:14 யோவா 7:31 யோவா 8:30 யோவா 8:31 யோவா 12:42 யோவா 12:43 மத் 13:20 மத் 13:21 மாற் 4:16 மாற் 4:17 லூக் 8:13 கலா 5:6 எபே 3:16 எபே 3:17 யாக் 2:19 யாக் 2:20
24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை: ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.யோவா 6:15 மத் 10:16 மத் 10:17
25மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.