16
முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா.
17
இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா.ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும்.
18
முதல் நாளில் திருப்பேரவை கூட்டப்படும்.கடின வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.
19
ஆனால் நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும்.
20
அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளை ஒன்றுக்கு ஆறு படியும், வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்கு படி அளவு வீதம் நீங்கள் படைக்க வேண்டும்.
21
ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி அளவு வீதம் படைக்க வேண்டும்.
22
இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
23
எந்நாளும் செலுத்தும் எரிபலியாக, காலை தோறும் செலுத்தும் எரிபலி நீங்கலாக, இவற்றை நீங்கள் செலுத்த வேண்டும்.
24
நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும்.இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது.
25
ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள்.நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது.