மத்தேயு 16:1-4 - WCV
1
பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர்.
2
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ( “ மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால் “ வானிலை நன்றாக இருக்கிறது “ என நீங்கள் சொல்வீர்கள்.
3
காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், “ இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் “ என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா? “)
4
“ இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது “ என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.