23
இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? “ என்று கேட்டார்கள்.
24
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.
25
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? “ என்று அவர் கேட்டார். அவர்கள், "" “விண்ணகத்திலிருந்து வந்தது “ என்போமானால், “பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை “ எனக் கேட்பார்.
26
“மனிதரிடமிருந்து “ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர் "" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27
எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது “ என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் “ என்றார்.
28
மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், “மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் “ என்றார்.
29
அவர் மறுமொழியாக, “நான் போக விரும்பவில்லை “ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.
30
அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, “நான் போகிறேன் ஐயா! “ என்றார்: ஆனால் போகவில்லை.
31
இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? “ என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே “ என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
32
ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை: அவரை நம்பவுமில்லை “ என்றார்.