24
யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.
25
யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார்.யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.
26
அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு: பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.
27
ஆடவர், “உன் பெயர் என்ன?” என,
28
அவர்: “நான் யாக்கோபு” என்றார்.அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும்.ஏனெனில், நீ கடளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.
29
யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார்.அவர்“என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.
30
அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் “பெனியேல்” என்று பெயரிட்டார்.