1 | பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். | அப் 20:16 யாத் 23:16 யாத் 34:22 லேவி 23:15-21 எண் 28:16-31 உபா 16:9-12 1கொரி 16:8 |
2 | திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. | அப் 16:25 அப் 16:26 ஏசா 65:24 மல்கி 3:1 லூக் 2:13 |
3 | மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். | அப் 2:4 அப் 2:11 ஆதி 11:6 சங் 55:9 1கொரி 12:10 வெளிப் 14:6 |
4 | அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌவேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். | அப் 1:5 அப் 4:8 அப் 4:31 அப் 6:3 அப் 6:5 அப் 6:8 அப் 7:55 அப் 9:17 அப் 11:24 அப் 13:9 அப் 13:52 லூக் 1:15 லூக் 1:41 லூக் 1:67 லூக் 4:1 யோவா 14:26 யோவா 20:22 ரோம 15:13 எபே 3:19 எபே 5:18 |
5 | அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். | அப் 2:1 அப் 8:27 யாத் 23:16 ஏசா 66:18 சகரி 8:18 லூக் 24:18 யோவா 12:20 |
6 | அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். | அப் 3:11 1கொரி 16:9 2கொரி 2:12 |
7 | எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? | அப் 2:12 அப் 3:10 அப் 14:11 அப் 14:12 மாற் 1:27 மாற் 2:12 |
8 | அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர். |
9 | பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், | 2இரா 17:6 எஸ்றா 6:2 தானி 8:20 |
10 | பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், | அப் 16:6 அப் 18:23 |
11 | யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! “என்றனர். | அப் 27:7 அப் 27:12 தீத் 1:5 தீத் 1:12 |
12 | எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். | அப் 10:17 அப் 17:20 லூக் 15:26 லூக் 18:36 |
13 | இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர். | அப் 2:15 1சாமு 1:14 யோபு 32:19 உன்ன 7:9 ஏசா 25:6 சகரி 9:15 சகரி 9:17 சகரி 10:7 எபே 5:18 |
14 | அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். | அப் 1:26 |
15 | நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது. | 1சாமு 1:15 |
16 | நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. | யோவே 2:28-32 |
17 | அவர் மூலம் கடவுள் கூறியது: 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர். | ஆதி 49:1 ஏசா 2:2 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 எபிரெ 1:2 யாக் 5:3 2பேது 3:3 |
18 | அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர். | 1கொரி 7:21 1கொரி 7:22 கலா 3:28 கொலோ 3:11 |
19 | இன்னும் மேலே வானத்தில் அருஞ்செயல்களையும் கீழே வையகத்தில் இரத்தம், நெருப்பு, புகைப்படலம் ஆகிய அடையாளங்களையும் கொடுப்பேன். | யோவே 2:30 யோவே 2:31 செப் 1:14-18 மல்கி 4:1-6 |
20 | ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்த நிறமாக மாறும். | ஏசா 13:9 ஏசா 13:15 ஏசா 24:23 எரே 4:23 ஆமோ 8:9 மத் 24:29 மத் 27:45 மாற் 13:24 லூக் 21:25 2பேது 3:7 2பேது 3:10 வெளிப் 6:12 வெளிப் 16:8 |
21 | அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.' | அப் 9:11 அப் 9:15 அப் 22:16 சங் 86:5 யோவே 2:32 மத் 28:19 ரோம 10:12 ரோம 10:13 1கொரி 1:2 எபிரெ 4:16 |
22 | இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. | அப் 3:12 அப் 5:35 அப் 13:16 அப் 21:28 ஏசா 41:14 |
23 | கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். | அப் 3:18 அப் 4:28 அப் 13:27 அப் 15:18 சங் 76:10 ஏசா 10:6 ஏசா 10:7 ஏசா 46:10 ஏசா 46:11 தானி 4:35 தானி 9:24-27 மத் 26:24 லூக் 22:22 லூக் 22:37 லூக் 24:44-46 யோவா 19:24 யோவா 19:31-37 ரோம 4:17 ரோம 11:33-36 1பேது 1:20 1பேது 2:8 யூதா 1:4 வெளிப் 13:8 |
24 | ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. | அப் 2:32 அப் 3:15 அப் 3:26 அப் 10:40 அப் 10:41 அப் 13:30 அப் 13:34 அப் 17:31 மத் 27:63 லூக் 24:1-53 யோவா 2:19-21 யோவா 10:18 ரோம 4:24 ரோம 6:4 ரோம 8:11 ரோம 8:34 ரோம 14:9 1கொரி 6:14 1கொரி 15:12 2கொரி 4:14 கலா 1:1 எபே 1:20 கொலோ 2:12 1தெச 1:10 எபிரெ 13:20 1பேது 1:21 |
25 | தாவீது அவரைக்குறித்துக் கூறியது: 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே நான் அசைவுறேன். | அப் 2:29 அப் 2:30 அப் 13:32-36 |
26 | இதனால் என் இதயம் பேறுவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். | சங் 16:9 சங் 22:22-24 சங் 30:11 சங் 63:5 சங் 71:23 |
27 | ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். | சங் 49:15 சங் 86:13 சங் 116:3 லூக் 16:23 1கொரி 15:55 வெளிப் 1:18 வெளிப் 20:13 |
28 | வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' | சங் 16:11 சங் 21:4 சங் 25:4 நீதி 2:19 நீதி 8:20 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 |
29 | “சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. | அப் 26:26 |
30 | அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிடடுக் கூறியதை அறிந்திருந்தார். | அப் 1:16 2சாமு 23:2 மத் 27:35 மாற் 12:36 லூக் 24:44 எபிரெ 3:7 எபிரெ 4:7 2பேது 1:21 |
31 | அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, 'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்: அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். | 1பேது 1:11 1பேது 1:12 |
32 | கடவுள் இந்த இயேசுவை உயிhத்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். | அப் 2:24 அப் 1:8 அப் 1:22 அப் 3:15 அப் 4:33 அப் 5:31 அப் 5:32 அப் 10:39-41 லூக் 24:46-48 யோவா 15:27 யோவா 20:26-31 |
33 | அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான். | அப் 5:31 சங் 89:19 சங் 89:24 சங் 118:16 சங் 118:22 சங் 118:23 ஏசா 52:13 ஏசா 53:12 மத் 28:18 மாற் 16:19 யோவா 17:5 எபே 1:20-23 பிலிப் 2:9-11 எபிரெ 1:2-4 எபிரெ 10:12 1பேது 1:21 1பேது 3:22 |
34 | விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது அல்ல. | சங் 110:1 மத் 22:42-45 மாற் 12:36 லூக் 20:42 லூக் 20:43 1கொரி 15:25 எபே 1:22 எபிரெ 1:13 |
35 | ஏனெனில், 'ஆண்டவர் என் தலைவரிடம்,”நான் உம் பகைவரை உமக்குக் கால்மனையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்”எனக் கூறினார் ' என்று அவரே சொல்கிறாரே. | ஆதி 3:15 யோசு 10:24 யோசு 10:25 சங் 2:8-12 சங் 18:40-42 சங் 21:8-12 சங் 72:9 ஏசா 49:23 ஏசா 59:18 ஏசா 60:14 ஏசா 63:4-6 லூக் 19:27 லூக் 20:16-18 ரோம 16:20 வெளிப் 19:19-21 வெளிப் 20:1-3 வெளிப் 20:8-15 |
36 | ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.” | எரே 2:4 எரே 9:26 எரே 31:31 எரே 33:14 எசே 34:30 எசே 39:25-29 சகரி 13:1 ரோம 9:3-6 |
37 | அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். | அப் 5:33 அப் 7:54 எசே 7:16 சகரி 12:10 லூக் 3:10 யோவா 8:9 யோவா 16:8-11 ரோம 7:9 1கொரி 14:24 1கொரி 14:25 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
38 | அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். | அப் 3:19 அப் 17:30 அப் 20:21 அப் 26:20 மத் 3:2 மத் 3:8 மத் 3:9 மத் 4:17 மத் 21:28-32 லூக் 15:1-32 லூக் 24:47 |
39 | ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார். | அப் 3:25 அப் 3:26 ஆதி 17:7 ஆதி 17:8 சங் 115:14 சங் 115:15 எரே 32:39 எரே 32:40 எசே 37:25 யோவே 2:28 ரோம 11:16 ரோம 11:17 1கொரி 7:14 |
40 | மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். | அப் 15:32 அப் 20:2 அப் 20:9 அப் 20:11 அப் 28:23 யோவா 21:25 |
41 | அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர். | அப் 2:37 அப் 8:6-8 அப் 13:48 அப் 16:31-34 மத் 13:44-46 கலா 4:14 கலா 4:15 1தெச 1:6 |
42 | அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. | அப் 2:46 அப் 11:23 அப் 14:22 மாற் 4:16 மாற் 4:17 யோவா 8:31 யோவா 8:32 1கொரி 11:2 கலா 1:6 எபே 2:20 கொலோ 1:23 2தீமோ 3:14 எபிரெ 10:39 2பேது 3:1 2பேது 3:2 2பேது 3:17 2பேது 3:18 1யோவா 2:19 |
43 | திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. | அப் 5:11 அப் 5:13 எஸ்தர் 8:17 எரே 33:9 ஓசி 3:5 லூக் 7:16 லூக் 8:37 |
44 | நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். | அப் 4:32 அப் 5:4 அப் 6:1-3 2கொரி 8:9 2கொரி 8:14 2கொரி 8:15 2கொரி 9:6-15 1யோவா 3:16-18 |
45 | நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். | அப் 4:34-37 அப் 5:1 அப் 5:2 அப் 11:29 லூக் 12:33 லூக் 12:34 லூக் 16:9 லூக் 18:22 லூக் 19:8 |
46 | ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்: பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். | அப் 1:14 அப் 3:1 அப் 5:42 லூக் 24:53 |
47 | அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்: எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்: ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார். | அப் 4:21 அப் 4:33 லூக் 2:52 லூக் 19:48 ரோம 14:18 |