செப்பனியா 1:14-18 - WCV
14
ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது: அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்: மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.
15
அந்த நாள் கடும் சினத்தின் நாள்: துன்பமும் துயரமும் நிறைந்த நாள்: பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்: இருட்டும் காரிருளும் கவிந்த நாள்:
16
அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.
17
மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்: பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்: அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்: சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
18
ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.