40
என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
41
உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
42
எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்: தெருச் சேறென அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.