8
உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்: உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.
9
நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்: ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்: நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.
10
அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்: அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.
11
உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.
12
நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்: அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.