1 | அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். | அப் 6:7 அப் 2:41 அப் 2:47 அப் 4:4 அப் 5:14 அப் 5:28 சங் 72:16 சங் 110:3 ஏசா 27:6 எரே 30:19 |
2 | எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. | அப் 21:22 |
3 | ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். | அப் 9:30 அப் 15:23 மத் 23:8 1யோவா 3:14-16 |
4 | நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர். | அப் 2:42 அப் 20:19-31 ரோம 12:6-8 1கொரி 9:16 கொலோ 4:17 1தீமோ 4:13-16 2தீமோ 4:2 |
5 | திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து | அப் 15:22 ஆதி 41:37 நீதி 15:1 நீதி 15:23 நீதி 25:11 நீதி 25:12 |
6 | அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். | அப் 1:24 அப் 8:17 அப் 9:17 அப் 13:3 1தீமோ 4:14 1தீமோ 5:22 2தீமோ 1:6 |
7 | கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர். | அப் 12:24 அப் 19:20 கொலோ 1:6 2தீமோ 2:9 |
8 | ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். | அப் 6:3 அப் 6:5 அப் 6:10 அப் 6:15 அப் 7:55 எபே 4:11 1தீமோ 3:13 |
9 | அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர். | அப் 13:45 அப் 17:17 அப் 17:18 |
10 | ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. | அப் 5:39 அப் 7:51 யாத் 4:12 ஏசா 54:17 எரே 1:18 எரே 1:19 எரே 15:20 எசே 3:27 மத் 10:19 மத் 10:20 லூக் 12:11 லூக் 12:12 லூக் 21:15 யோவா 7:46 |
11 | பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். | அப் 23:12-15 அப் 24:1-13 அப் 25:3 அப் 25:7 1இரா 21:10 1இரா 21:13 மத் 26:59 மத் 26:60 மத் 28:12-15 யோவா 16:3 ரோம 3:8 |
12 | அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்: | அப் 13:50 அப் 14:2 அப் 17:5 அப் 17:13 அப் 21:27 நீதி 15:18 |
13 | மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள். | அப் 6:11 சங் 27:12 சங் 35:11 சங் 56:5 |
14 | மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். | அப் 25:8 |
15 | தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர். | யாத் 34:29-35 பிரச 8:1 மத் 13:43 மத் 17:2 2கொரி 3:7 2கொரி 3:8 2கொரி 3:18 |