1 | பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்: | அப் 4:6 அப் 6:7 அப் 6:12 மத் 26:3 மத் 26:4 மத் 27:1 மத் 27:2 மத் 27:20 மத் 27:41 யோவா 15:20 யோவா 18:3 |
2 | அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து, | அப் 5:17 அப் 13:45 அப் 19:23 நெகே 2:10 யோவா 11:47 யோவா 11:48 |
3 | அவர்களைக் கைது செய்தார்கள்: ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். | அப் 5:18 அப் 6:12 அப் 8:3 அப் 9:2 அப் 12:1-3 அப் 16:19-24 மத் 10:16 மத் 10:17 லூக் 22:52 லூக் 22:54 யோவா 18:12 |
4 | அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். | அப் 28:24 2கொரி 2:14-17 பிலிப் 1:12-18 2தீமோ 2:9 2தீமோ 2:10 |
5 | மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள். | அப் 5:20 அப் 5:21 மீகா 2:1 மத் 27:1 மத் 27:2 |
6 | அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். | லூக் 3:2 யோவா 11:49 யோவா 18:13 யோவா 18:14 யோவா 18:24 |
7 | அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி,”நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள். | அப் 5:27 1இரா 21:12-14 யோவா 8:3 யோவா 8:9 |
8 | அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, | அப் 4:31 அப் 2:4 அப் 7:55 மத் 10:19 மத் 10:20 லூக் 12:11 லூக் 12:12 லூக் 21:14 லூக் 21:15 |
9 | உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். | அப் 3:7 யோவா 7:23 யோவா 10:32 1பேது 3:15-17 1பேது 4:14 |
10 | நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். | அப் 13:38 அப் 28:28 எரே 42:19 எரே 42:20 தானி 3:18 |
11 | இந்த இயேசுவே, “கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்.” | சங் 118:22 சங் 118:23 ஏசா 28:16 மத் 21:42-45 மாற் 12:10-12 லூக் 20:16-18 1பேது 2:6-8 |
12 | இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. | அப் 10:42 அப் 10:43 மத் 1:21 மாற் 16:15 மாற் 16:16 யோவா 3:36 யோவா 14:6 1கொரி 3:11 1தீமோ 2:5 1தீமோ 2:6 எபிரெ 2:3 எபிரெ 12:25 1யோவா 5:11 1யோவா 5:12 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 20:15 |
13 | பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்: அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். | அப் 2:7-12 மத் 4:18-22 மத் 11:25 யோவா 7:15 யோவா 7:49 1கொரி 1:27 |
14 | நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. | அப் 4:10 அப் 3:8-12 |
15 | எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். | அப் 5:34-42 அப் 26:30-32 |
16 | “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்: இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. | யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:18 |
17 | ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள். | அப் 5:39 சங் 2:1-4 தானி 2:34 தானி 2:35 ரோம 10:16-18 ரோம 15:18-22 1தெச 1:8 |
18 | அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். | அப் 5:40 |
19 | அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்: | 2கொரி 4:2 எபே 6:1 1தீமோ 2:3 |
20 | என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். | அப் 2:4 அப் 2:32 அப் 17:16 அப் 17:17 அப் 18:5 எண் 22:38 எண் 23:20 2சாமு 23:2 யோபு 32:18-20 எரே 1:7 எரே 1:17-19 எரே 4:19 எரே 6:11 எரே 20:9 எசே 3:11 எசே 3:14-21 மீகா 3:8 1கொரி 9:16 1கொரி 9:17 |
21 | அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஏனென்றால் நடந்ததைக் குறித்து மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். | அப் 4:17 அப் 5:40 |
22 | இந்த அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர். | அப் 3:2 அப் 9:33 மத் 9:20 லூக் 13:11 யோவா 5:5 யோவா 9:1 |
23 | விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். | அப் 1:13 அப் 1:14 அப் 2:44-46 அப் 12:11 அப் 12:12 அப் 16:40 சங் 16:3 சங் 42:4 சங் 119:63 நீதி 13:20 மல்கி 3:16 2கொரி 6:14-17 |
24 | இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: “ஆண்டவரே, “விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே”. | அப் 16:25 சங் 55:16-18 சங் 62:5-8 சங் 69:29 சங் 69:30 சங் 109:29-31 எரே 20:13 லூக் 6:11 லூக் 6:12 2கொரி 1:8-11 1தெச 5:16-18 2தீமோ 4:17 2தீமோ 4:18 |
25 | எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் “வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? | அப் 1:16 அப் 2:30 |
26 | பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்” என்று உரைத்தீர். | சங் 83:2-8 யோவே 3:9-14 வெளிப் 17:12-14 வெளிப் 17:17-14 வெளிப் 19:16-21 |
27 | அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். | மத் 26:3 லூக் 22:1 லூக் 23:1 லூக் 23:8-12 |
28 | உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். | அப் 2:23 அப் 3:18 அப் 13:27-29 ஆதி 50:20 சங் 76:10 மத் 26:24 மத் 26:54 லூக் 22:22 லூக் 24:44-46 1பேது 2:7 1பேது 2:8 |
29 | இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும். | அப் 4:17 அப் 4:18 அப் 4:21 ஏசா 37:17-20 ஏசா 63:15 புலம் 3:50 புலம் 5:1 தானி 9:18 |
30 | உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்: அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.” | யாத் 6:6 உபா 4:34 எரே 15:15 எரே 20:11 எரே 20:12 லூக் 9:54-56 லூக் 22:49-51 |
31 | இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். | அப் 2:2 அப் 16:25 அப் 16:26 |
32 | நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. | அப் 1:14 அப் 2:1 அப் 5:12 2நாளா 30:12 எரே 32:39 எசே 11:19 எசே 11:20 யோவா 17:11 யோவா 17:21-23 ரோம 12:5 ரோம 15:5 ரோம 15:6 1கொரி 1:10 1கொரி 12:12-14 2கொரி 13:11 எபே 4:2-6 பிலிப் 1:27 பிலிப் 2:1 பிலிப் 2:2 1பேது 3:8 |
33 | திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். | அப் 4:30 அப் 1:8 அப் 1:22 அப் 2:32 அப் 2:33 அப் 3:15 அப் 3:16 அப் 5:12-16 மாற் 16:20 லூக் 24:48 லூக் 24:49 ரோம 15:18 ரோம 15:19 1தெச 1:5 எபிரெ 2:4 |
34 | தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து | உபா 2:7 சங் 34:9 சங் 34:10 லூக் 22:35 1தெச 4:12 |
35 | திருத்தூதருடைய காலடியில் வைப்பர்: அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும். | அப் 3:6 அப் 5:2 அப் 6:1-6 2கொரி 8:20 2கொரி 8:21 |
36 | சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். | அப் 11:22-25 அப் 11:30-25 அப் 12:25 அப் 13:1 அப் 15:2 அப் 15:12 அப் 15:37 1கொரி 9:6 கலா 2:1 கலா 2:9 கலா 2:13 |
37 | அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். | அப் 4:34 அப் 4:35 அப் 5:1 அப் 5:2 மத் 19:29 |