இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஓசியா 11

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்: எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.ஓசி 2:15 உபா 7:7 எரே 2:2 எசே 16:6 மல்கி 1:2
2எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்: பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.ஓசி 11:7 உபா 29:2-4 1சாமு 8:7-9 2இரா 17:13-15 2நாளா 36:15 2நாளா 36:16 நெகே 9:30 ஏசா 30:9-11 எரே 35:13 எரே 44:16 எரே 44:17 சகரி 1:4 சகரி 7:11 லூக் 13:34 யோவா 3:19 அப் 7:51 2கொரி 2:15 2கொரி 2:16
3ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே: அவர்களைக் கையிலேந்தியதும் நானே: ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.யாத் 19:4 எண் 11:11 எண் 11:12 உபா 1:31 உபா 8:2 உபா 32:10-12 ஏசா 46:3 ஏசா 63:9 அப் 13:18
4பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்: அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்: அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.உன்ன 1:4 ஏசா 63:9 யோவா 6:44 யோவா 12:32 2கொரி 5:14
5எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள்: அசீரியா அவர்களை அரசாளும்: ஏனெனில் என்னிடம் திரும்பி வர மறுத்துவிட்டார்கள்.ஓசி 7:16 ஓசி 8:13 ஓசி 9:3 ஓசி 9:6
6அவர்களுடைய தீய எண்ணங்களை முன்னிட்டு அவர்களின் நகர்களுக்கு எதிராக வாள் பாய்ந்தெழுந்து, அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, அவர்களை விழுங்கிவிடும்.ஓசி 10:14 ஓசி 13:16 லேவி 26:31 லேவி 26:33 உபா 28:52 உபா 32:25 எரே 5:17 மீகா 5:11
7என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள், அவர்கள்மேல் நுகத்தடி பூட்டப்படுவதால் கூக்குரலிடுவார்கள்: அந்த நுகத்தை அகற்றுவார் எவருமில்லை.ஓசி 4:16 ஓசி 14:4 சங் 78:57 சங் 78:58 நீதி 14:14 எரே 3:6 எரே 3:8 எரே 3:11 எரே 8:5 எரே 14:7
8எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்? உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்? செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ? என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது.ஓசி 6:4 எரே 9:7 புலம் 3:33 மத் 23:37 லூக் 19:41 லூக் 19:42
9என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்: எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்: நான் இறைவன், வெறும் மனிதனல்ல: நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.ஓசி 14:4 யாத் 32:10-14 உபா 32:26 உபா 32:27 சங் 78:38 ஏசா 27:4-8 ஏசா 48:9 எரே 30:11 எரே 31:1-3 எசே 20:8 எசே 20:9 எசே 20:13 எசே 20:14 எசே 20:21-23
10ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்: நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்: ஆம், நான் கர்ச்சனை செய்வேன். அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர்.ஏசா 2:5 ஏசா 49:10 எரே 2:2 எரே 7:6 எரே 7:9 எரே 31:9 மீகா 4:5 சகரி 10:12 யோவா 8:12 ரோம 8:1 2பேது 2:10
11எகிப்தினின்று பறவைகள்போலவும், அசீரியா நாட்டினின்று புறாக்களைப் போலவும் நடுங்கிக் கொண்டு வருவர்: அவர்களைத் தம் வீடுகளுக்கே திரும்பச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.ஓசி 3:5 ஓசி 9:3-6 ஏசா 11:11 சகரி 10:10
12எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது: இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது. ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்: தூயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.ஓசி 7:16 ஓசி 12:1 ஓசி 12:7 சங் 78:36 ஏசா 29:13 ஏசா 44:20 ஏசா 59:3 ஏசா 59:4 மீகா 6:12
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.