| 1 | இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான். | 1நாளா 24:14 எஸ்றா 2:37 எஸ்றா 2:38 நெகே 7:40 நெகே 7:41 |
| 2 | அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான். | எரே 1:19 எரே 19:14 எரே 19:15 எரே 26:8 எரே 29:26 எரே 36:26 எரே 37:15 எரே 37:16 எரே 38:6 1இரா 22:27 2நாளா 16:10 2நாளா 24:21 ஆமோ 7:10-13 மத் 5:10-12 மத் 21:35 மத் 23:34-37 அப் 4:3 அப் 5:18 அப் 5:40 அப் 7:52 அப் 16:22-24 எபிரெ 11:36 எபிரெ 11:37 வெளிப் 2:10 வெளிப் 17:6 |
| 3 | மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: “ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக 'மாகோர் மிசாபீபு' என்றே அழைத்துள்ளார். | அப் 4:5-7 அப் 16:30 அப் 16:35-39 |
| 4 | ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான். | உபா 28:65-67 யோபு 18:11-21 யோபு 20:23-26 சங் 73:19 எசே 26:17-21 மத் 27:4 மத் 27:5 |
| 5 | இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள். | எரே 3:24 எரே 4:20 எரே 12:12 எரே 15:13 எரே 24:8-10 எரே 27:19-22 எரே 32:3-5 எரே 39:2 எரே 39:8 எரே 52:7-23 2இரா 20:17 2இரா 20:18 2இரா 24:12-16 2இரா 25:13-17 2நாளா 36:10 2நாளா 36:17-19 புலம் 1:7 புலம் 1:10 புலம் 4:12 எசே 22:25 தானி 1:2 |
| 6 | பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்: அங்கேயே புதைக்கப்படுவீர்கள். | எரே 28:15-17 எரே 29:21 எரே 29:22 எரே 29:32 அப் 13:8-11 |
| 7 | ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். | எரே 1:6-8 எரே 1:18-8 எரே 1:19-8 எரே 15:18 எரே 17:16 யாத் 5:22 யாத் 5:23 எண் 11:11-15 |
| 8 | நான் பேசும்போதெல்லாம் “வன்முறை அழிவு” என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. | எரே 4:19-22 எரே 5:1 எரே 5:6 எரே 5:15-17 எரே 6:6 எரே 6:7 எரே 7:9 எரே 13:13 எரே 13:14 எரே 15:1-4 எரே 15:13-4 எரே 15:14-4 எரே 17:27 எரே 18:16 எரே 18:17 எரே 19:7-11 எரே 28:8 |
| 9 | “அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. | 1இரா 19:3 1இரா 19:4 யோவா 1:2 யோவா 1:3 யோவா 4:2 யோவா 4:3 லூக் 9:62 அப் 15:37 அப் 15:38 |
| 10 | “சுற்றிலும் ஒரே திகில்!” என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்: “பழிசுமத்துங்கள்: வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்” என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்: “ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்: நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்” என்கிறார்கள். | சங் 31:13 சங் 57:4 சங் 64:2-4 மத் 26:59 மத் 26:60 |
| 11 | ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை: அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது. | எரே 1:8 எரே 1:19 எரே 15:20 ஏசா 41:10 ஏசா 41:14 ரோம 8:31 2தீமோ 4:17 |
| 12 | படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே: நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்: ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். | எரே 17:10 சங் 7:9 சங் 11:5 சங் 17:3 சங் 26:2 சங் 26:3 சங் 139:23 வெளிப் 2:23 |
| 13 | ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார். | சங் 34:6 சங் 35:9-11 சங் 69:33 சங் 72:4 சங் 109:30 சங் 109:31 ஏசா 25:4 யாக் 2:5 யாக் 2:6 |
| 14 | நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்: என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும். | எரே 15:10 யோபு 3:3-16 |
| 15 | “உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக! | எரே 1:5 ஆதி 21:5 ஆதி 21:6 லூக் 1:14 |
| 16 | அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்! | ஆதி 19:24 ஆதி 19:25 உபா 29:23 ஓசி 11:8 ஆமோ 4:11 செப் 2:9 லூக் 17:29 2பேது 2:6 யூதா 1:7 |
| 17 | தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே! அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே! | யோபு 3:10 யோபு 3:11 யோபு 3:16 யோபு 10:18 யோபு 10:19 பிரச 6:3 |
| 18 | கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்? துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ? | யோபு 3:20 யோபு 14:1 யோபு 14:13 புலம் 3:1 |