உபாகமம் 28:65-67 - WCV
65
அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது.அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.
66
உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும்.உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.
67
கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும்,”இது மாலையாக இருக்கக் கூடாதா?” என்பாய்: மாலையானதும்,”இது காலையாக இருக்கக்கூடாதா?” என்பாய்.