இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 34

                   
புத்தகங்களைக் காட்டு
1வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்: மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்: மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்: வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.ஏசா 18:3 ஏசா 33:13 ஏசா 41:1 ஏசா 43:9 ஏசா 49:1 நியா 5:3 நியா 5:31 சங் 49:1 சங் 49:2 சங் 50:1 சங் 96:10 மாற் 16:15 மாற் 16:16 வெளிப் 2:7
2வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்: அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்: அவர்களை அவர் அடியோடு அழிப்பார்: அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.ஏசா 24:1-23 எரே 25:15-29 யோவே 3:9-14 ஆமோ 1:1-2 செப் 3:8 சகரி 14:3 சகரி 14:12-16 ரோம 1:18 வெளிப் 6:12-17 வெளிப் 14:15-20 வெளிப் 19:15-21 வெளிப் 20:9 வெளிப் 20:15
3அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்: அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்: அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்தோடும்.ஏசா 14:19 ஏசா 14:20 2இரா 9:35-37 எரே 8:1 எரே 8:2 எரே 22:19 எசே 39:4 எசே 39:11 யோவே 2:20
4விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்: வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்: திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.ஏசா 13:10 ஏசா 14:12 சங் 102:25 சங் 102:26 எரே 4:23 எரே 4:24 எசே 32:7 எசே 32:8 யோவே 2:30 யோவே 2:31 யோவே 3:15 மத் 24:29 மத் 24:35 மாற் 13:24 மாற் 13:25 அப் 2:19 அப் 2:20 2பேது 3:7-12 வெளிப் 6:13 வெளிப் 6:14 வெளிப் 8:12 வெளிப் 20:11
5ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது: இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.உபா 32:14 உபா 32:42 சங் 17:13 எரே 46:10 எரே 47:6 எசே 21:3-5 எசே 21:9-11 செப் 2:12 வெளிப் 1:16
6அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின் இரத்தக் கறை படிந்துள்ளது: அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது: ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்: ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.ஏசா 63:3 எரே 49:13 எசே 21:4 எசே 21:5 எசே 21:10
7அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்: எருதுகளுடன் காளைகளும் மடியும்: அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்: தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.எண் 23:22 எண் 24:8 உபா 33:17 யோபு 39:9 யோபு 39:10 சங் 92:10
8ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது: சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.ஏசா 26:21 ஏசா 35:4 ஏசா 49:26 ஏசா 59:17 ஏசா 59:18 ஏசா 61:2 ஏசா 63:4 உபா 32:35 உபா 32:41-43 சங் 94:1 எரே 46:10 மீகா 6:1 லூக் 18:7 ரோம 2:5 ரோம 2:8 ரோம 2:9 2தெச 1:6-10 வெளிப் 6:10 வெளிப் 6:11 வெளிப் 18:20 வெளிப் 19:2
9ஏதோமின் நீரோடைகள் கீலாகும்: அதன் தரைப்புழுதி கந்தகமாகும்: அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.ஆதி 19:28 உபா 29:23 யோபு 18:15 சங் 11:6 லூக் 17:29 யூதா 1:7 வெளிப் 19:20 வெளிப் 21:8
10இரவும் பகலும் அது அணையாமல் எரியும்: அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்: தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்: எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்யார்.ஏசா 1:31 ஏசா 66:24 எரே 7:20 எசே 20:47 எசே 20:48 மாற் 9:43-48
11கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்: ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்: ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்: அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.ஏசா 13:20-22 ஏசா 14:23 செப் 2:14 வெளிப் 18:2 வெளிப் 18:21-23
12உயர்குடி மக்கள் அங்கே இல்லை: அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை: அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.ஏசா 3:6-8 பிரச 10:16 பிரச 10:17
13அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்: அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்: ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.ஏசா 32:13 ஏசா 32:14 ஓசி 9:6 செப் 2:9
14காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்: காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்: கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.ஏசா 13:21
15ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்: பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.
16ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: “எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை” ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.ஏசா 30:8 உபா 31:21 யோசு 1:8 நீதி 23:12 தானி 10:21 ஆமோ 3:7 மல்கி 3:16 யோவா 5:39 யோவா 10:35 2பேது 1:19 மத் 5:18 லூக் 21:33
17அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்: அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது: அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.யோசு 18:8 சங் 78:55 அப் 13:19 அப் 17:26
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.