ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: “நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு: வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்: ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.