இணை வசன வேதாகமம்

நீதிமொழிகள் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.நீதி 23:29-35 நீதி 31:4 ஆதி 9:21-23 ஆதி 19:31-36 1சாமு 25:36-38 2சாமு 11:13 2சாமு 13:28 1இரா 20:16-21 ஏசா 28:7 ஓசி 4:11 ஓசி 7:5 ஆபகூ 2:15 ஆபகூ 2:16 1கொரி 6:10 கலா 5:21 எபே 5:18
2அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்: அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.நீதி 16:14 நீதி 16:15 நீதி 19:12 பிரச 10:4 ஓசி 11:10 ஆமோ 3:8
3விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு: ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாத்ததை விரும்புகின்றனர்.நீதி 14:29 நீதி 16:32 நீதி 17:14 நீதி 19:11 நீதி 25:8-10 எபே 1:6-8 எபே 4:32 எபே 5:1
4சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்: அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.நீதி 10:4 நீதி 19:15 நீதி 19:24 நீதி 26:13-16
5மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது: மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்?நீதி 18:4 சங் 64:6 1கொரி 2:11
6பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்: ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?நீதி 25:14 நீதி 27:2 மத் 6:2 லூக் 18:8 லூக் 18:11 லூக் 18:28 லூக் 22:33 2கொரி 12:11
7எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.நீதி 14:2 நீதி 19:1 சங் 15:2 சங் 26:1 சங் 26:11 ஏசா 33:15 லூக் 1:6 2கொரி 1:12 தீத் 2:11 தீத் 2:12 3யோவா 1:3 3யோவா 1:4
8மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான்.நீதி 20:26 நீதி 16:12 நீதி 29:14 1சாமு 23:3 1சாமு 23:4 2சாமு 23:4 சங் 72:4 சங் 92:9 சங் 99:4 சங் 101:6-8 ஏசா 32:1
9“என் இதயத்தைக் தூயதாக்கி விட்டேன்: நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன்”என்று யாரால் சொல்லக்கூடும்?1இரா 8:46 2நாளா 6:36 யோபு 14:4 யோபு 15:14 யோபு 25:4 சங் 51:5 பிரச 7:20 1கொரி 4:4 யாக் 3:2 1யோவா 1:8-10
10பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.உபா 25:13
11சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்: அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.நீதி 21:8 நீதி 22:15 சங் 51:5 சங் 58:3 மத் 7:16 லூக் 1:15 லூக் 1:66 லூக் 2:46 லூக் 2:47 லூக் 6:43 லூக் 6:44
12கேட்கும் காது, காணும் கண்: இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.யாத் 4:11 சங் 94:9 சங் 119:18 மத் 13:13-16 அப் 26:18 எபே 1:17 எபே 1:18
13தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே: நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு: உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.நீதி 6:9-11 நீதி 10:4 நீதி 12:11 நீதி 13:4 நீதி 19:15 நீதி 24:30-34 ரோம 12:11 2தெச 3:10
14ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்: வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.பிரச 1:10 ஓசி 12:7 ஓசி 12:8 1தெச 4:6
15பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.நீதி 3:15 நீதி 8:11 நீதி 10:20 நீதி 10:21 நீதி 15:7 நீதி 15:23 நீதி 16:16 நீதி 16:21 நீதி 16:24 நீதி 25:12 யோபு 28:12-19 பிரச 12:9-11 ரோம 10:14 ரோம 10:15 எபே 4:29
16அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.நீதி 11:15 நீதி 22:26 நீதி 22:27 நீதி 27:13 யாத் 22:26 யாத் 22:27
17வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்: ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.நீதி 4:17
18நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்: சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.நீதி 15:22 நீதி 24:6
19வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே.நீதி 11:13 நீதி 18:8 நீதி 26:20-22 லேவி 19:16
20தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.நீதி 30:11 நீதி 30:17 யாத் 20:12 யாத் 21:17 லேவி 20:9 உபா 27:16 மத் 15:4 மாற் 7:10-13
21தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.நீதி 23:4 நீதி 28:20 நீதி 28:22 1தீமோ 6:9
22“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே: ஆண்டவரையே நம்பியிரு: அவர் உன்னைக் காப்பார்.நீதி 17:13 நீதி 24:29 உபா 32:35 ரோம 12:17-19 1தெச 5:15 1பேது 3:9
23பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்: போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.நீதி 20:10 எசே 45:10
24மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்: அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?சங் 37:23 எரே 10:23 தானி 5:23 அப் 17:28
25எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும்.நீதி 18:7 லேவி 5:15 லேவி 22:10-15 லேவி 27:30 மல்கி 3:8-10
26ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்: அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.நீதி 20:8 2சாமு 4:9-12 சங் 101:5-8
27ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு: அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.ஆதி 2:7 யோபு 32:8 ரோம 2:15 1கொரி 2:11 2கொரி 4:2-6 1யோவா 3:19-21
28அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்: அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.நீதி 16:6 சங் 61:7 சங் 101:1
29இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை: முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.எரே 9:23 எரே 9:24 1யோவா 2:14
30நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்: கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.நீதி 19:25 நீதி 22:15 ஏசா 27:9 எபிரெ 12:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.