ரோமர் 12:17-19 - WCV
17
தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.
18
இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.
19
அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்: அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” என்கிறார் ஆண்டவர்.