1 | தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை: | பிரச 1:12 பிரச 7:27 பிரச 12:8-10 நெகே 6:7 சங் 40:9 ஏசா 61:1 யோனா 3:2 2பேது 2:5 |
2 | வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். | பிரச 2:11 பிரச 2:15 பிரச 2:17 பிரச 2:19 பிரச 2:21 பிரச 2:23 பிரச 2:26 பிரச 3:19 பிரச 4:4 பிரச 4:8 பிரச 4:16 பிரச 5:10 பிரச 6:11 பிரச 11:8 பிரச 11:10 பிரச 12:8 சங் 39:5 சங் 39:6 சங் 62:9 சங் 62:10 சங் 144:4 ரோம 8:20 |
3 | மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? | பிரச 2:22 பிரச 3:9 பிரச 5:16 நீதி 23:4 நீதி 23:5 ஏசா 55:2 ஆபகூ 2:13 ஆபகூ 2:18 மத் 16:26 மாற் 8:36 மாற் 8:37 யோவா 6:27 |
4 | ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. | பிரச 6:12 ஆதி 5:3-31 ஆதி 11:20-32 ஆதி 36:9-19 ஆதி 47:9 யாத் 1:6 யாத் 1:7 யாத் 6:16-27 சங் 89:47 சங் 89:48 சங் 90:9 சங் 90:10 சகரி 1:5 |
5 | ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. | ஆதி 8:22 சங் 19:4-6 சங் 89:36 சங் 89:37 சங் 104:19-23 எரே 33:20 |
6 | தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. | யோபு 37:9 யோபு 37:17 சங் 107:25 சங் 107:29 யோனா 1:4 மத் 7:24 மத் 7:27 யோவா 3:8 அப் 27:13-15 |
7 | எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. | யோபு 38:10 யோபு 38:11 சங் 104:6-9 |
8 | அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. | பிரச 2:11 பிரச 2:26 மத் 11:28 ரோம 8:22 ரோம 8:23 |
9 | முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. | பிரச 3:15 பிரச 7:10 2பேது 2:1 |
10 | ஏதேனும் ஒன்றைப்பற்றி, “இதோ, இது புதியது” என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! | மத் 5:12 மத் 23:30-32 லூக் 17:26-30 அப் 7:51 1தெச 2:14-16 2தீமோ 3:8 |
11 | முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை. | பிரச 2:16 சங் 9:6 ஏசா 41:22-26 ஏசா 42:9 |
12 | சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். | பிரச 1:1 1இரா 4:1-19 |
13 | இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்! | பிரச 1:17 பிரச 7:25 பிரச 8:9 பிரச 8:16 பிரச 8:17 சங் 111:2 நீதி 2:2-4 நீதி 4:7 நீதி 18:1 நீதி 18:15 நீதி 23:26 1தீமோ 4:15 |
14 | இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை. | பிரச 1:17 பிரச 1:18 பிரச 2:11 பிரச 2:17 பிரச 2:26 1இரா 4:30-32 சங் 39:5 சங் 39:6 |
15 | கோணலானதை நேராக்க இயலாது: இல்லாததை எண்ணிக் கையில் சேர்க்க முடியாது. | பிரச 3:14 பிரச 7:12 பிரச 7:13 யோபு 11:6 யோபு 34:29 ஏசா 40:4 புலம் 3:37 தானி 4:35 மத் 6:27 |
16 | எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்: மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். | 2இரா 5:20 சங் 4:4 சங் 77:6 ஏசா 10:7-14 எரே 22:14 எசே 38:10 எசே 38:11 தானி 4:30 |
17 | ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்: மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன். | பிரச 1:13 பிரச 2:3 பிரச 2:12 பிரச 7:23-25 1தெச 5:21 |
18 | ஞானம் பெருகக் கவலை பெருகும்: அறிவு பெருகத் துயரம் பெருகும். | பிரச 2:15 பிரச 7:16 பிரச 12:12 பிரச 12:13 யோபு 28:28 1கொரி 3:18-20 யாக் 3:13-17 |