1 | “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்: | யோவே 2:29 தானி 12:1 செப் 3:19 செப் 3:20 |
2 | அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்: அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்: ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்: எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்: | செப் 3:8 சகரி 14:2-4 வெளிப் 16:14 வெளிப் 16:16 வெளிப் 19:19-21 வெளிப் 20:8 |
3 | என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்: ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்: பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள். | 2நாளா 28:8 2நாளா 28:9 ஆமோ 2:6 ஒபதி 1:11 நாகூ 3:10 வெளிப் 18:13 |
4 | தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன். | நியா 11:12 2நாளா 21:16 2நாளா 28:17 2நாளா 28:18 அப் 9:4 |
5 | நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்: விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள். | 2இரா 12:18 2இரா 16:8 2இரா 18:15 2இரா 18:16 2இரா 24:13 2இரா 25:13-17 எரே 50:28 எரே 51:11 தானி 5:2 தானி 5:3 |
6 | யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்: இவ்வாறு அவர்கள் தங்கள நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள். | யோவே 3:3 யோவே 3:8 உபா 28:32 உபா 28:68 எசே 27:13 |
7 | நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன். | ஏசா 11:12 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 49:12 எரே 23:8 எரே 30:10 எரே 30:16 எரே 31:8 எரே 32:37 எசே 34:12 எசே 34:13 எசே 36:24 எசே 38:8 சகரி 10:6-10 |
8 | உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்:” இதைக் கூறுவது ஆண்டவரே. | உபா 32:30 நியா 2:14 நியா 4:2 நியா 4:9 |
9 | வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்: போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்ததெழச் செய்யுங்கள்: படை வீராகள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும். | சங் 96:10 ஏசா 34:1 எரே 31:10 எரே 50:2 |
10 | உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்: கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக் கொள்ளுங்கள்: வலுவற்றவனும் “நானொரு போர்வீரன்” என்று சொல்லிக் கொள்ளட்டும். | ஏசா 2:4 மீகா 4:3 லூக் 22:36 |
11 | சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்: வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்: ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும். | யோவே 3:2 எசே 38:9-18 மீகா 4:12 செப் 3:8 சகரி 14:2 சகரி 14:3 வெளிப் 16:14-16 வெளிப் 19:19 வெளிப் 19:20 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
12 | வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்: கிளர்ந்தெழுந்து யொசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்: ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். | யோவே 3:2 யோவே 3:14 2நாளா 20:26 எசே 39:11 சகரி 14:4 சங் 2:8 சங் 2:9 சங் 7:6 சங் 76:8 சங் 76:9 சங் 96:13 சங் 98:9 சங் 110:5 சங் 110:6 ஏசா 2:4 ஏசா 3:13 எசே 30:3 மீகா 4:3 வெளிப் 19:11 |
13 | அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது: திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன: அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. | உபா 16:9 மாற் 4:29 வெளிப் 14:15 வெளிப் 14:16 |
14 | திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது. | யோவே 3:2 ஏசா 34:2-8 ஏசா 63:1-7 எசே 38:8-23 எசே 39:8-20 வெளிப் 16:14-16 வெளிப் 19:19-21 |
15 | கதிரவனும் நிலவும் இருளடைகின்றன: விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. | யோவே 2:10 யோவே 2:31 ஏசா 13:10 மத் 24:29 லூக் 21:25 லூக் 21:26 வெளிப் 6:12 வெளிப் 6:13 |
16 | சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்: விண்ணும் மண்ணும் அதிர்கின்றன: ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்: இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. | யோவே 2:11 ஏசா 42:13 எரே 25:30 எரே 25:31 ஓசி 11:10 ஆமோ 1:2 ஆமோ 3:8 |
17 | நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்: எருசலேம் தூயதாய் இருக்கும்: அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். | யோவே 3:21 யோவே 2:27 சங் 9:11 சங் 76:2 ஏசா 12:6 எசே 48:35 மீகா 4:7 செப் 3:14-16 |
18 | “அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்: குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்: யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்: ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்: அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். | யோபு 29:6 ஏசா 55:12 ஏசா 55:13 ஆமோ 9:13 ஆமோ 9:14 |
19 | எகிப்து பாழ்நிலமாகும்: ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்: ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்: அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். | ஏசா 11:15 ஏசா 19:1-15 சகரி 10:10 சகரி 14:18 சகரி 14:19 |
20 | யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்: எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். | ஏசா 33:20 எசே 37:25 ஆமோ 9:15 |
21 | சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்: குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்: ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன். | ஏசா 4:4 எசே 36:25 எசே 36:29 மத் 27:25 |