| 1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: | எசே 12:22 எசே 21:2 எசே 40:2 2நாளா 34:7 |
| 2 | மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது! |
| 3 | இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்: உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்: வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும் தக்க பதிலளி கொடுப்பேன். | எசே 7:8 எசே 7:9 எசே 5:13 எசே 6:3-7 எசே 6:12-7 எசே 6:13-7 |
| 4 | என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | எசே 7:9 எசே 5:11 எசே 8:18 எசே 9:10 எசே 24:14 எரே 13:14 சகரி 11:6 |
| 5 | தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு! | எசே 5:9 2இரா 21:12 2இரா 21:13 தானி 9:12 ஆமோ 3:2 நாகூ 1:9 மத் 24:21 |
| 6 | முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது: இதோ, அது வருகின்றது. | எசே 7:3 எரே 44:27 |
| 7 | நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல: குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள். | ஆதி 19:15 ஆதி 19:24 ஏசா 17:14 ஆமோ 4:13 |
| 8 | இப்போது விரைவில் என் சீற்றத்தை உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்: உன் வழிகளுக்கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு, உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி உனக்குப் பதிலடி கொடுப்பேன். | எசே 9:8 எசே 14:19 எசே 20:8 எசே 20:13 எசே 20:21 எசே 20:33 எசே 22:31 எசே 30:15 எசே 36:18 2நாளா 34:21 சங் 79:6 ஏசா 42:25 எரே 7:20 புலம் 2:4 புலம் 4:11 தானி 9:11 தானி 9:27 ஓசி 5:10 நாகூ 1:6 வெளிப் 14:10 வெளிப் 16:2-21 |
| 9 | என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக உன் நடத்தைக்கும் உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்றும் நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | ஏசா 9:13 மீகா 6:9 கலா 6:7 வெளிப் 20:13 |
| 10 | இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! கேடுகாலம் நெருங்கி விட்டது: அநீதி துளித்து விட்டது: செருக்கு அரும்பிவிட்டது. | எசே 7:6 1தெச 5:3 |
| 11 | வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது: அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ, எதுவுமே தப்ப முடியாது. அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது. | எசே 7:23 ஏசா 5:7 ஏசா 9:4 ஏசா 14:29 ஏசா 59:6-8 எரே 6:7 ஆமோ 3:10 ஆமோ 6:3 மீகா 2:2 மீகா 3:3 மீகா 6:12 யாக் 2:13 |
| 12 | அந்நேரம் வந்துவிட்டது: அந்நாள் நெருங்கிவிட்டது. வாங்குவோர் மகிழ வேண்டாம்: விற்போர் வருந்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே சினத்துக்கு இலக்காகிவிட்டனர். | எசே 7:5-7 எசே 7:10-7 1கொரி 7:29-31 யாக் 5:8 யாக் 5:9 |
| 13 | அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது. | பிரச 8:8 லேவி 25:24-28 லேவி 25:31-28 |
| 14 | அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது. | எரே 4:5 எரே 6:1 எரே 51:27 |
| 15 | வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும் கொள்ளை நோயும் உள்ளன. வயலில் இருப்போர் வாளால் மடிவர். நகரில் இருப்போரையோ பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும். | எசே 5:12 உபா 32:23-25 எரே 14:18 எரே 15:2 எரே 15:3 புலம் 1:20 |
| 16 | அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போல்ப் புலம்புவர். | எசே 6:8 எஸ்றா 9:15 ஏசா 1:9 ஏசா 37:31 எரே 44:14 எரே 44:28 |
| 17 | கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்: முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும். | எசே 21:7 ஏசா 13:7 ஏசா 13:8 எரே 6:24 எபிரெ 12:12 |
| 18 | அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்: திகில் அவர்களை மூடிக்கொள்ளும்: முகங்கள் எல்லாம் வெட்சி நாணும்: அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும். | ஏசா 3:24 ஏசா 15:2 ஏசா 15:3 எரே 48:37 ஆமோ 8:10 |
| 19 | தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்: பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்: ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது: அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை: அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை: ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது. | 2இரா 7:7 2இரா 7:8 2இரா 7:15 நீதி 11:4 ஏசா 2:20 ஏசா 30:22 செப் 1:18 மத் 16:26 |
| 20 | அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்: அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்: எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன். | எசே 24:21 1நாளா 29:1 1நாளா 29:2 2நாளா 2:9 2நாளா 3:1-17 எஸ்றா 3:12 சங் 48:2 சங் 50:2 சங் 87:2 சங் 87:3 ஏசா 64:11 ஆகா 2:3 |
| 21 | மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்: அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள். | 2இரா 24:13 2இரா 25:9 2இரா 25:13-16 2நாளா 36:18 2நாளா 36:19 சங் 74:2-8 சங் 79:1 எரே 52:13-23 |
| 22 | அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்: அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்: கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர். | சங் 10:11 சங் 35:22 சங் 74:10 சங் 74:11 சங் 74:18-23 எரே 18:17 |
| 23 | நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்: நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன. | எசே 19:3-6 எரே 27:2 எரே 40:1 புலம் 3:7 நாகூ 3:10 |
| 24 | ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்: அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்: வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்: அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும். | எசே 21:31 எசே 28:7 சங் 106:41 எரே 4:7 எரே 12:12 ஆபகூ 1:6-10 |
| 25 | கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்: ஆனால் அது கிடைக்காது. | ஏசா 57:21 ஏசா 59:8-12 எரே 8:15 எரே 8:16 புலம் 4:17 புலம் 4:18 மீகா 1:12 |
| 26 | அழிவுக்குமேல் அழிவு உண்டாகும், வதந்திக்கு மேல் வதந்தி பரவும்: இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்: ஆனால் குருக்களிடம் திருச்சட்டமும் மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும். | லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:24 லேவி 26:28 உபா 32:23 எரே 4:20 |
| 27 | அரசன் புலம்புவான்: இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்: நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்: அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்: அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்: அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர். | எசே 12:10-22 எசே 17:15-21 எசே 21:25 எரே 52:8-11 |