8
அமைதி வழியை அவர்கள் அறியார்: நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை: தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்: அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.
9
ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது: நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்: காரிருள்தான் கிட்டியது: விடியலை எதிர்பார்த்தோம்: இருளிலேயே நடக்கின்றோம்:
10
பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்: கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்: நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.
11
கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்: புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்: நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை: விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.
12
உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன: எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன: எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன: எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.