| 1 | ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” | எரே 13:11 எரே 19:1 எரே 27:2 எசே 4:1-5 எபிரெ 1:1 |
| 2 | ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். | நீதி 3:5 ஏசா 20:2 எசே 2:8 ஓசி 1:2 ஓசி 1:3 யோவா 13:6 யோவா 13:7 யோவா 15:14 |
| 3 | எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: | எரே 13:3 எரே 13:8 |
| 4 | “நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.” | எரே 51:63 எரே 51:64 சங் 137:1 மீகா 4:10 |
| 5 | ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன். | யாத் 39:42 யாத் 39:43 யாத் 40:16 மத் 22:2-6 யோவா 2:5-8 அப் 26:19 அப் 26:20 2தீமோ 2:3 எபிரெ 11:8 எபிரெ 11:17-19 |
| 6 | பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.” |
| 7 | அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது. | எரே 13:10 எரே 24:1-8 ஏசா 64:6 எசே 15:3-5 சகரி 3:3 சகரி 3:4 லூக் 14:34 லூக் 14:35 ரோம 3:12 பிலேமோ 1:11 |
| 8 | அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
| 9 | “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். | எரே 18:4-6 புலம் 5:5-8 |
| 10 | என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். | எரே 5:23 எரே 7:25-28 எரே 8:5 எரே 11:7 எரே 11:18 எரே 15:1 எரே 25:3-7 எரே 34:14-17 எண் 14:11 2நாளா 36:15 2நாளா 36:16 எபிரெ 12:25 |
| 11 | கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டால் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர். | யாத் 19:5 யாத் 19:6 உபா 4:7 உபா 26:18 உபா 32:10-15 சங் 135:4 சங் 147:20 |
| 12 | நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ “சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?” என்று உன்னிடம் கூறுவார்கள். | எசே 24:19 |
| 13 | அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன். | எரே 25:15-18 எரே 25:27-18 எரே 51:7 சங் 60:3 சங் 75:8 ஏசா 29:9 ஏசா 49:26 ஏசா 51:17 ஏசா 51:21 ஏசா 63:6 ஆபகூ 2:16 |
| 14 | அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர். | எரே 19:9-11 எரே 48:12 நியா 7:20-22 1சாமு 14:16 2நாளா 20:23 சங் 2:9 ஏசா 9:20 ஏசா 9:21 |
| 15 | செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்: ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார். | ஏசா 42:23 யோவே 1:2 வெளிப் 2:29 |
| 16 | உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்: இருண்ட மேகங்கள் எழச்செய்வார். | யோசு 7:19 1சாமு 6:5 சங் 96:7 சங் 96:8 |
| 17 | ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்: அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்: எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது. | எரே 22:5 மல்கி 2:2 |
| 18 | அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்: கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது. | எரே 22:26 2இரா 24:12 2இரா 24:15 எசே 19:2-14 யோனா 3:6 |
| 19 | நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன: அவற்றைத் திறப்பார் யாருமில்லை: யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது. | எரே 17:26 எரே 33:13 யோசு 18:5 எசே 20:46 எசே 20:47 |
| 20 | உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்: உனக்குத் தரப்பட்ட மந்தை-உன் பெருமைக்குரிய மந்தை-எங்கே? | எரே 1:14 எரே 6:22 எரே 10:22 ஆபகூ 1:6 |
| 21 | உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய்? பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா? | எரே 5:31 எரே 22:23 ஏசா 10:3 எசே 28:9 |
| 22 | இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்: உன் குற்றம் பெரிது! அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது! உன் கால்கள் புண்படுத்தப்பட்டன. | உபா 7:17 உபா 8:17 உபா 18:21 ஏசா 47:8 செப் 1:12 லூக் 5:21 லூக் 5:22 |
| 23 | எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும். | எரே 2:22 எரே 2:30 எரே 5:3 எரே 6:29 எரே 6:30 எரே 17:9 நீதி 27:22 ஏசா 1:5 மத் 19:24-28 |
| 24 | பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல் நான் உங்களைச் சிதறடிப்பேன். | லேவி 26:33 உபா 4:27 உபா 28:64 உபா 32:26 எசே 5:2 எசே 5:12 எசே 6:8 எசே 17:21 லூக் 21:24 |
| 25 | இதுவே உன் கதி! நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு! ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய், என்கிறார் ஆண்டவர். | யோபு 20:29 சங் 11:6 ஏசா 17:4 மத் 24:51 |
| 26 | உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்கிக் கழற்றிவிடுவேன்: உன் அவமானம் காணப்படும். | எரே 13:22 புலம் 1:8 எசே 16:37 எசே 23:29 ஓசி 2:10 |
| 27 | உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்: ஐயகோ! எருசலேமே! நீ தூய்மை பெறுவது எந்நாளோ? | எரே 2:20-24 எரே 3:1 எரே 3:2 எரே 5:7 எரே 5:8 எசே 16:15-22 எசே 23:2-21 ஓசி 1:2 ஓசி 4:2 2கொரி 12:21 யாக் 4:4 |