| 1 | ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார். | ஆதி 43:32-34 யூதா 1:12 |
| 2 | உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். | மத் 18:8 மத் 18:9 1கொரி 9:27 பிலிப் 3:19 |
| 3 | அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே: அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம். | நீதி 23:6 சங் 141:4 தானி 1:8 லூக் 21:34 எபே 4:22 |
| 4 | செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே: அதனால் உனது அறிவை இழந்து விடாதே. | நீதி 28:20 யோவா 6:27 1தீமோ 6:8-10 |
| 5 | இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ? | சங் 119:36 சங் 119:37 எரே 22:17 1யோவா 2:16 |
| 6 | கஞ்சர் தரும் உணவை உண்ணாதே: அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே. | நீதி 22:9 உபா 15:9 உபா 28:56 மத் 20:15 மாற் 7:22 |
| 7 | அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்: “உண்டு பருகு” என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம். | நீதி 19:22 மத் 9:3 மத் 9:4 லூக் 7:39 |
| 8 | நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்: நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும். |
| 9 | மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே: உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார். | நீதி 9:7 நீதி 9:8 நீதி 26:4 நீதி 26:5 ஏசா 36:21 மத் 7:6 அப் 13:45 அப் 13:46 அப் 28:25-28 |
| 10 | வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே: உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே. | நீதி 22:28 உபா 19:14 உபா 27:17 யோபு 24:2 |
| 11 | ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார். | நீதி 22:23 யாத் 22:22-24 உபா 27:19 சங் 12:5 எரே 50:33 எரே 50:34 எரே 51:36 |
| 12 | நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து: அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு. | நீதி 23:19 நீதி 2:2-6 நீதி 5:1 நீதி 5:2 நீதி 22:17 எசே 33:31 மத் 13:52 யாக் 1:21-25 |
| 13 | பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே: பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். | நீதி 13:24 நீதி 19:18 நீதி 29:15 நீதி 29:17 |
| 14 | நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய். | நீதி 22:15 1கொரி 5:5 1கொரி 11:32 |
| 15 | பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். | நீதி 1:10 நீதி 2:1 நீதி 4:1 மத் 9:2 யோவா 21:5 1யோவா 2:1 |
| 16 | உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும். | நீதி 8:6 எபே 4:29 எபே 5:4 கொலோ 4:4 யாக் 3:2 |
| 17 | வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே: ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு. | நீதி 3:31 நீதி 24:1 சங் 37:1-3 சங் 73:3-7 |
| 18 | அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்: உன் நம்பிக்கையும் வீண்போகாது. | சங் 37:37 எரே 29:11 லூக் 16:25 ரோம 6:21 ரோம 6:22 |
| 19 | பிள்ளாய், இதைக் கவனி: ஞானமுள்ளவனாயிரு: உன் மனத்தை நன்னெறியில் செலுத்து. | நீதி 23:12 நீதி 23:26 நீதி 4:10-23 |
| 20 | குடிகாரரோடு சேராதே: பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. | நீதி 23:29-35 நீதி 20:1 நீதி 28:7 நீதி 31:6 நீதி 31:7 ஏசா 5:11 ஏசா 5:22 ஏசா 22:13 மத் 24:49 லூக் 15:13 லூக் 16:19 லூக் 21:34 ரோம 13:13 எபே 5:18 1பேது 4:3 1பேது 4:4 |
| 21 | குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும். | நீதி 21:17 உபா 21:20 ஏசா 28:1-3 யோவே 1:5 1கொரி 5:11 1கொரி 6:10 கலா 5:21 பிலிப் 3:19 |
| 22 | பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே. | நீதி 1:8 நீதி 6:20 உபா 21:18-21 உபா 27:16 மாற் 7:10 எபே 6:1 எபே 6:2 |
| 23 | மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு: ஆனால் அதை விற்பனை செய்யாதே: அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு. | நீதி 2:2-4 நீதி 4:5-7 நீதி 10:1 நீதி 16:16 நீதி 17:16 யோபு 28:12-19 சங் 119:72 சங் 119:127 ஏசா 55:1 மத் 13:44 மத் 13:46 பிலிப் 3:7 பிலிப் 3:8 வெளிப் 3:18 |
| 24 | நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்: ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார். | நீதி 23:15 நீதி 23:16 நீதி 10:1 நீதி 15:20 1இரா 1:48 1இரா 2:1-3 1இரா 2:9-3 பிரச 2:19 |
| 25 | நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக: உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக. | நீதி 17:25 1நாளா 4:9 1நாளா 4:10 லூக் 1:31-33 லூக் 1:40-47 லூக் 1:58-47 லூக் 11:27 லூக் 11:28 |
| 26 | மகனே, நான் சொல்வதைக் கவனி: என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து. | நீதி 4:23 உபா 6:5 மத் 10:37 மத் 10:38 லூக் 14:26 2கொரி 5:14 2கொரி 5:15 2கொரி 8:5 எபே 3:17 |
| 27 | விலைமகள் ஒரு படுகுழி: பரத்தை ஓர் ஆழ்கிணறு. | நீதி 22:14 |
| 28 | அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்: அவள் ஏராளமான பேரை வஞ்வசிப்பவள். | நீதி 2:16-19 நீதி 7:12 நீதி 7:22-27 நீதி 9:18 நீதி 22:14 நியா 16:4-22 பிரச 7:26 எரே 3:2 |
| 29 | துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்? | நீதி 23:21 நீதி 20:1 1சாமு 25:36 1சாமு 25:37 2சாமு 13:28 1இரா 20:16-22 ஏசா 5:11 ஏசா 5:22 ஏசா 28:7 ஏசா 28:8 நாகூ 1:10 மத் 24:49 மத் 24:50 லூக் 12:45 லூக் 12:46 எபே 5:18 |
| 30 | திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே, | நீதி 20:1 ஆதி 9:21 ஏசா 5:11 ஆமோ 6:6 எபே 5:18 |
| 31 | மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்: | நீதி 6:25 2சாமு 11:2 யோபு 33:1 சங் 119:37 மத் 5:28-30 மாற் 9:47 1யோவா 2:16 |
| 32 | பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்: விரியனைப் போலத் தீண்டும். | நீதி 5:11 ஏசா 28:3 ஏசா 28:7 ஏசா 28:8 எரே 5:31 யாத் 7:5 யாத் 7:6 யாத் 7:12 லூக் 16:25 லூக் 16:26 ரோம 6:21 |
| 33 | உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்: உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். | ஆதி 19:32-38 |
| 34 | கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும். | 1சாமு 25:33-38 1சாமு 30:16 1சாமு 30:17 2சாமு 13:28 1இரா 16:9 1இரா 20:16-22 யோவே 1:5 மத் 24:38 லூக் 17:27-29 லூக் 21:34 1தெச 5:2-7 |
| 35 | “என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை: நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய். | நீதி 27:22 எரே 5:3 எரே 31:18 |