18
ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,
19
தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.
20
”எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்: எங்கள் சொல் கேட்பதில்லை: பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்” என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.
21
உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்: அவனும் செத்தொழிவான்.இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று.அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.