| 1 | கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை. | ஆதி 28:16 ஆதி 28:17 யாத் 3:5 லேவி 10:3 யோசு 5:15 2நாளா 26:16 சங் 89:7 ஏசா 1:12-20 1கொரி 11:22 எபிரெ 12:28 எபிரெ 12:29 |
| 2 | கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே: எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்: நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்: எனவே, மிகச்சில சொற்களே சொல். | ஆதி 18:27 ஆதி 18:30 ஆதி 18:32 ஆதி 28:20 ஆதி 28:22 எண் 30:2-5 நியா 11:30 1சாமு 14:24-45 மாற் 6:23 |
| 3 | கவலை மிகுமானால் கனவுகள் வரும்: சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும். | பிரச 10:12-14 நீதி 10:19 நீதி 15:2 |
| 4 | கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று. | ஆதி 28:20 ஆதி 35:1 ஆதி 35:3 எண் 30:2 உபா 23:21-23 சங் 50:14 சங் 76:11 சங் 119:106 ஏசா 19:21 மத் 5:33 |
| 5 | கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல். | உபா 23:22 நீதி 20:25 அப் 5:4 |
| 6 | வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்: தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்? | பிரச 5:1 பிரச 5:2 யாக் 1:26 யாக் 3:2 |
| 7 | கனவுகள் பல வரலாம்: செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட. | பிரச 5:3 மத் 12:36 |
| 8 | ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள். | பிரச 3:16 பிரச 4:1 சங் 12:5 சங் 55:9 சங் 58:11 நீதி 8:17 ஆபகூ 1:2 ஆபகூ 1:3 ஆபகூ 1:13 |
| 9 | “பொதுநலம்”, “நாட்டுத் தொண்டு” என்ற சொற்களும் உன் காதில் விழும். | ஆதி 1:29 ஆதி 1:30 ஆதி 3:17-19 சங் 104:14 சங் 104:15 சங் 115:16 நீதி 13:23 நீதி 27:23-27 நீதி 28:19 எரே 40:10-12 |
| 10 | பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது: செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே. | பிரச 4:8 பிரச 6:7 சங் 52:1 சங் 52:7 சங் 62:10 நீதி 30:15 நீதி 30:16 ஆபகூ 2:5-7 மத் 6:19 மத் 6:24 லூக் 12:15 1தீமோ 6:10 |
| 11 | சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்பேரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு? | ஆதி 12:16 ஆதி 13:2 ஆதி 13:5-7 1இரா 4:22 1இரா 4:23 1இரா 5:13-16 நெகே 5:17 நெகே 5:18 சங் 119:36 சங் 119:37 |
| 12 | வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்: ஆனால் அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது. | சங் 4:8 சங் 127:2 நீதி 3:24 எரே 31:26 |
| 13 | உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். | பிரச 4:8 பிரச 6:1 பிரச 6:2 |
| 14 | ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை. | பிரச 2:26 யோபு 5:5 யோபு 20:15-29 யோபு 27:16 யோபு 27:17 சங் 39:6 நீதி 23:5 ஆகா 1:9 ஆகா 2:16 ஆகா 2:17 மத் 6:19 மத் 6:20 |
| 15 | மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்: வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை. | யோபு 1:21 சங் 49:17 லூக் 12:20 1தீமோ 6:7 |
| 16 | இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்: காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார். | பிரச 5:13 பிரச 2:22 பிரச 2:23 |
| 17 | அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். | ஆதி 3:17 1இரா 17:12 யோபு 21:25 சங் 78:33 சங் 102:9 சங் 127:2 எசே 4:16 எசே 4:17 |
| 18 | ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்: தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்: அதுவே தகுந்ததுமாகும். | பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 3:22 பிரச 8:15 பிரச 9:7 பிரச 11:9 1தீமோ 6:17 |
| 19 | கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை. | பிரச 2:24 பிரச 3:13 பிரச 6:2 உபா 8:18 1இரா 3:13 |
| 20 | தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார். | சங் 37:16 |