1 | யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். | யோவா 2:13 யாத் 23:14-17 யாத் 34:23 லேவி 23:2-4 உபா 16:16 மத் 3:15 கலா 4:4 |
2 | எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். | நெகே 3:1 நெகே 12:39 |
3 | இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். (இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். | மத் 15:30 லூக் 7:22 |
4 | ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.) | சங் 119:60 நீதி 6:4 நீதி 8:17 பிரச 9:10 ஓசி 13:13 மத் 6:33 மத் 11:12 லூக் 13:24-28 லூக் 16:16 |
5 | முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். | யோவா 5:14 யோவா 9:1 யோவா 9:21 மாற் 9:21 லூக் 8:43 லூக் 13:16 அப் 3:2 அப் 4:22 அப் 9:33 அப் 14:8 |
6 | இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். | யோவா 21:17 சங் 142:3 எபிரெ 4:13 எபிரெ 4:15 |
7 | “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். | உபா 32:36 சங் 72:12 சங் 142:4 ரோம 5:6 2கொரி 1:8-10 |
8 | இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். | மத் 9:6 மாற் 2:11 லூக் 5:24 அப் 9:34 |
9 | உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். | யோவா 5:14 மாற் 1:31 மாற் 1:42 மாற் 5:29 மாற் 5:41 மாற் 5:42 மாற் 10:52 அப் 3:7 அப் 3:8 |
10 | அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். | யாத் 20:8-11 யாத் 31:12-17 நெகே 13:15-21 ஏசா 58:13 எரே 17:21 எரே 17:27 மத் 12:2-8 மாற் 2:24 மாற் 3:4 லூக் 6:2 லூக் 13:14 லூக் 23:56 |
11 | அவர் மறுமொழியாக”என்னை நலமாக்கியவரே, “உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்” என்று என்னிடம் கூறினார்” என்றார். | யோவா 9:16 மாற் 2:9-11 |
12 | “படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். | நியா 6:29 1சாமு 14:38 மத் 21:23 ரோம 10:2 |
13 | ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார். | யோவா 14:9 |
14 | புpன்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்: இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். | லேவி 7:12 சங் 9:13 சங் 27:6 சங் 66:13-15 சங் 107:20-22 சங் 116:12-19 சங் 118:18 ஏசா 38:20 ஏசா 38:22 |
15 | அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். | யோவா 4:29 யோவா 9:11 யோவா 9:12 மாற் 1:45 |
16 | ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். | யோவா 15:20 அப் 9:4 அப் 9:5 |
17 | இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்: நானும் செயலாற்றுகிறேன்” என்றார். | யோவா 9:4 யோவா 14:10 ஆதி 2:1 ஆதி 2:2 சங் 65:6 ஏசா 40:26 மத் 10:29 அப் 14:17 அப் 17:28 1கொரி 12:6 கொலோ 1:16 எபிரெ 1:3 |
18 | இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள். | யோவா 7:19 |
19 | இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது: தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். | யோவா 5:24 யோவா 5:25 யோவா 3:3 |
20 | தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்: இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள். | யோவா 3:35 யோவா 17:26 மத் 3:17 மத் 17:5 2பேது 1:17 |
21 | தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார். | உபா 32:39 1இரா 17:21 2இரா 4:32-35 2இரா 5:7 அப் 26:8 ரோம 4:17-19 |
22 | தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். | யோவா 5:27 யோவா 3:35 யோவா 17:2 சங் 9:7 சங் 9:8 சங் 50:3-6 சங் 96:13 சங் 98:9 பிரச 11:9 பிரச 12:14 மத் 11:27 மத் 16:27 மத் 25:31-46 மத் 28:18 அப் 10:42 அப் 17:31 ரோம 2:16 ரோம 14:10-12 2கொரி 5:10 2தெச 1:7-10 2தீமோ 4:1 1பேது 4:5 வெளிப் 20:11 வெளிப் 20:12 |
23 | மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. | யோவா 14:1 சங் 146:3-5 எரே 17:5-7 மத் 12:21 ரோம 15:12 2கொரி 1:9 எபே 1:12 எபே 1:13 2தீமோ 1:12 சங் 2:12 ஏசா 42:8 ஏசா 43:10 ஏசா 44:6 மத் 28:19 ரோம 1:7 1கொரி 1:3 2கொரி 13:14 1தெச 3:11-13 2தெச 2:16 2தெச 2:17 எபிரெ 1:6 2பேது 3:18 வெளிப் 5:8-14 மத் 10:37 மத் 22:37 மத் 22:38 1கொரி 16:22 எபே 6:24 லூக் 12:8 லூக் 12:9 ரோம 6:22 ரோம 14:7-9 1கொரி 6:19 1கொரி 10:31 2கொரி 5:14 2கொரி 5:19 தீத் 2:14 ஏசா 43:11 ஏசா 45:15 ஏசா 45:21 சகரி 9:9 தீத் 2:13 தீத் 3:4-6 2பேது 1:1 |
24 | என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்: ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். | யோவா 3:16 யோவா 3:18 யோவா 3:36 யோவா 6:40 யோவா 6:47 யோவா 8:51 யோவா 11:26 யோவா 12:44 யோவா 20:31 மாற் 16:16 ரோம 10:11-13 1பேது 1:21 1யோவா 5:1 1யோவா 5:11-13 |
25 | காலம் வருகிறது: ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்: அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். | யோவா 4:23 யோவா 13:1 யோவா 17:1 |
26 | தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். | யாத் 3:14 சங் 36:9 சங் 90:2 எரே 10:10 அப் 17:25 1தீமோ 1:17 1தீமோ 6:16 |
27 | அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். | யோவா 5:22 சங் 2:6-9 சங் 110:1 சங் 110:2 சங் 110:6 அப் 10:42 அப் 17:31 1கொரி 15:25 எபே 1:20-23 1பேது 3:22 |
28 | இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது: அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு | யோவா 5:20 யோவா 3:7 அப் 3:12 |
29 | வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்: தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். | தானி 12:2 தானி 12:3 மத் 25:31-46 அப் 24:15 |
30 | நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன். | யோவா 5:19 யோவா 8:28 யோவா 8:42 யோவா 14:10 |
31 | “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. | யோவா 8:13 யோவா 8:14 யோவா 8:54 நீதி 27:2 வெளிப் 3:14 |
32 | என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். | யோவா 5:36 யோவா 5:37 யோவா 1:33 யோவா 8:17 யோவா 8:18 யோவா 12:28-30 மத் 3:17 மத் 17:5 மாற் 1:11 லூக் 3:22 1யோவா 5:6-9 |
33 | யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். | யோவா 1:19-27 |
34 | மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல: நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். | யோவா 5:41 யோவா 8:54 |
35 | யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். | யோவா 1:7 யோவா 1:8 மத் 11:11 லூக் 1:15-17 லூக் 1:76-17 லூக் 1:77-17 லூக் 7:28 2பேது 1:19 |
36 | “யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். | யோவா 5:32 1யோவா 5:9 1யோவா 5:11 1யோவா 5:12 |
37 | “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை: அவரது உருவைக் கண்டதுமில்லை. | யோவா 6:27 யோவா 8:18 மத் 3:17 மத் 17:5 மத் 17:32 |
38 | அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை: ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. | யோவா 5:42 யோவா 5:46 யோவா 5:47 யோவா 8:37 யோவா 8:46 யோவா 8:47 யோவா 15:7 உபா 6:6-9 யோசு 1:8 சங் 119:11 நீதி 2:1 நீதி 2:2 நீதி 7:1 நீதி 7:2 கொலோ 3:16 யாக் 1:21 யாக் 1:22 1யோவா 2:14 |
39 | மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. | யோவா 5:46 யோவா 7:52 உபா 11:18-20 உபா 17:18 உபா 17:19 யோசு 1:8 சங் 1:2 சங் 119:11 சங் 119:97-99 நீதி 6:23 நீதி 8:33 நீதி 8:34 ஏசா 8:20 ஏசா 34:16 எரே 8:9 மத் 22:29 மாற் 12:10 லூக் 16:29 லூக் 16:31 அப் 8:32-35 அப் 17:11 ரோம 3:2 கொலோ 3:16 2தீமோ 3:14-17 2பேது 1:19-21 |
40 | வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. | யோவா 5:44 யோவா 1:11 யோவா 3:19 யோவா 8:45 யோவா 8:46 யோவா 12:37-41 சங் 81:11 ஏசா 49:7 ஏசா 50:2 ஏசா 53:1-3 மத் 22:3 மத் 23:37 வெளிப் 22:17 |
41 | “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. | யோவா 5:34 யோவா 6:15 யோவா 7:18 யோவா 8:50 யோவா 8:54 1தெச 2:6 1பேது 2:21 2பேது 1:17 |
42 | உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. | யோவா 1:47-49 யோவா 2:25 யோவா 21:17 லூக் 16:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
43 | நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். | யோவா 3:16 யோவா 6:38 யோவா 8:28 யோவா 8:29 யோவா 10:25 யோவா 12:28 யோவா 17:4-6 எசே 23:21 எபிரெ 5:4 எபிரெ 5:5 |
44 | கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? | யோவா 3:20 யோவா 8:43 யோவா 12:43 எரே 13:23 ரோம 8:7 ரோம 8:8 எபிரெ 3:12 |
45 | தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார். | யோவா 7:19 யோவா 8:5 யோவா 8:9 ரோம 2:12 ரோம 2:17-29 ரோம 3:19 ரோம 3:20 ரோம 7:9-14 2கொரி 3:7-11 கலா 3:10 |
46 | நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப்பற்றித் தான் எழுதினார். | கலா 2:19 கலா 3:10 கலா 3:13 கலா 3:24 கலா 4:21-31 |
47 | அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?” | லூக் 16:29 லூக் 16:31 |