1 | யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு | லூக் 1:76 லூக் 2:11 லூக் 19:31 லூக் 19:34 அப் 10:36 1கொரி 2:8 1கொரி 15:47 2கொரி 4:5 யாக் 2:1 வெளிப் 19:16 |
2 | யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். | அப் 10:48 1கொரி 1:13-17 |
3 | ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல: அவருடைய சீடர்களே. | யோவா 3:32 யோவா 10:40 யோவா 11:54 மத் 10:23 மாற் 3:7 |
4 | கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது. | மத் 10:5 மத் 10:6 லூக் 2:49 லூக் 9:51 லூக் 9:52 லூக் 17:11 |
5 | அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. | ஆதி 33:19 ஆதி 48:22 யோசு 24:32 |
6 | அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். | மத் 4:2 மத் 8:24 எபிரெ 2:17 எபிரெ 4:15 |
7 | அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். | யோவா 4:10 யோவா 19:28 ஆதி 24:43 2சாமு 23:15-17 1இரா 17:10 மத் 10:42 |
8 | இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். | யோவா 6:5-7 லூக் 9:13 |
9 | அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்: நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. | யோவா 4:27 யோவா 8:48 லூக் 10:33 லூக் 17:16-19 |
10 | இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் “குடிக்கத் தண்ணீர் கொடும்” எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்: அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். | யோவா 3:16 ஏசா 9:6 ஏசா 42:6 ஏசா 49:6-8 லூக் 11:13 ரோம 8:32 1கொரி 1:30 2கொரி 9:15 எபே 2:8 |
11 | அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை: கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? | யோவா 3:4 1கொரி 2:14 |
12 | எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். | யோவா 8:53 ஏசா 53:2 ஏசா 53:3 மத் 12:42 எபிரெ 3:3 |
13 | இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். | யோவா 6:27 யோவா 6:49 ஏசா 65:13 ஏசா 65:14 லூக் 16:24 |
14 | நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது: நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார். | யோவா 6:35 யோவா 6:58 யோவா 11:26 யோவா 17:2 யோவா 17:3 ஏசா 49:10 ரோம 6:23 வெளிப் 7:16 |
15 | அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்: அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது: தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்றார். | யோவா 6:26 யோவா 6:34 யோவா 17:2 யோவா 17:3 சங் 4:6 ரோம 6:23 ரோம 8:5 1கொரி 2:14 1யோவா 5:20 யாக் 4:3 |
16 | இயேசு அவரிடம், “நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்று கூறினார். | யோவா 4:18 யோவா 1:42 யோவா 1:47 யோவா 1:48 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
17 | அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், “எனக்குக் கணவர் இல்லை” என நீர் சொல்வது சரியே. |
18 | உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். | ஆதி 20:3 ஆதி 34:2 ஆதி 34:7 ஆதி 34:8 ஆதி 34:31 எண் 5:29 ரூத் 4:10 எரே 3:20 எசே 16:32 மாற் 10:12 ரோம 7:3 1கொரி 7:10 1கொரி 7:11 எபிரெ 13:4 |
19 | அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். | யோவா 4:29 யோவா 1:48 யோவா 1:49 2இரா 5:26 2இரா 6:12 லூக் 7:39 1கொரி 14:24 1கொரி 14:25 |
20 | எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார். | ஆதி 12:6 ஆதி 12:7 ஆதி 33:18-20 உபா 27:12 யோசு 8:33-35 நியா 9:6 நியா 9:7 2இரா 17:26-33 |
21 | இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். | எசே 14:3 எசே 20:3 |
22 | யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. | 2இரா 17:27-29 2இரா 17:41-29 எஸ்றா 4:2 அப் 17:23 அப் 17:30 |
23 | காலம் வருகிறது: ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். | யோவா 5:25 யோவா 12:23 |
24 | கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார். | 2கொரி 3:17 1தீமோ 1:17 |
25 | அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். | யோவா 4:42 யோவா 1:41 யோவா 1:42 யோவா 1:49 தானி 9:24-26 |
26 | இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார். | யோவா 9:37 மத் 16:20 மத் 20:15 மத் 26:63 மத் 26:64 மாற் 14:61 மாற் 14:62 லூக் 13:30 ரோம 10:20 ரோம 10:21 |
27 | அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் “என்ன செய்ய வேண்டும்?” என்றோ, “அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை. | யோவா 4:9 லூக் 7:39 |
28 | அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், | யோவா 4:7 மத் 28:8 மாற் 16:8-10 லூக் 24:9 லூக் 24:33 |
29 | “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்றார். | யோவா 4:17 யோவா 4:18 யோவா 4:25 யோவா 1:41-49 1கொரி 14:24 1கொரி 14:25 வெளிப் 22:17 |
30 | அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். | ஏசா 60:8 மத் 2:1-3 மத் 8:11 மத் 8:12 மத் 11:20-24 மத் 12:40-42 மத் 20:16 லூக் 17:16-18 அப் 8:5-8 அப் 10:33 அப் 13:42 அப் 28:28 ரோம 5:20 |
31 | அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்” என்று வேண்டினர். | ஆதி 24:33 அப் 16:30-34 |
32 | இயேசு அவர்களிடம், “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார். | யோவா 4:34 யோபு 23:12 சங் 63:5 சங் 119:103 நீதி 18:20 ஏசா 53:11 எரே 15:16 அப் 20:35 |
33 | “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். | மத் 16:6-11 லூக் 9:45 |
34 | இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. | யோவா 4:32 யோவா 6:33 யோவா 6:38 யோபு 23:12 சங் 40:8 ஏசா 61:1-3 லூக் 15:4-6 லூக் 15:10-6 லூக் 19:10 அப் 20:35 |
35 | “நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை” என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. | யோவா 4:30 மத் 9:37 மத் 9:38 லூக் 10:3 |
36 | அறுப்பவர் கூலி பெறுகிறார்: நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். | நீதி 11:30 தானி 12:3 ரோம 1:13 ரோம 6:22 1கொரி 9:19-23 பிலிப் 2:15 பிலிப் 2:16 1தெச 2:19 1தீமோ 4:16 2தீமோ 4:7 2தீமோ 4:8 யாக் 5:19 யாக் 5:20 |
37 | நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்: ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். | நியா 6:3 மீகா 6:15 லூக் 19:21 |
38 | இவ்வாறு “விதைப்பவர் ஒருவர்: அறுவடை செய்பவர் வேறு ஒருவர்” என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார். | அப் 2:41 அப் 4:4 அப் 4:32 அப் 5:14 அப் 6:7 அப் 8:4-8 அப் 8:14-17 |
39 | “நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். | யோவா 10:41 யோவா 10:42 யோவா 11:45 |
40 | சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். | ஆதி 32:26 நீதி 4:13 உன்ன 3:4 எரே 14:8 லூக் 8:38 லூக் 10:39 லூக் 24:29 அப் 16:15 |
41 | அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். | ஆதி 49:10 அப் 1:8 அப் 8:12 அப் 8:25 அப் 15:3 |
42 | அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை: நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள். | யோவா 1:45-49 யோவா 17:8 அப் 17:11 அப் 17:12 |
43 | அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். | மத் 15:21-24 மாற் 7:27 மாற் 7:28 ரோம 15:8 |
44 | தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். | மத் 13:57 மாற் 6:4 லூக் 4:24 |
45 | அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். | மத் 4:23 மத் 4:24 லூக் 8:40 |
46 | கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். | யோவா 2:1-11 யோவா 21:2 யோசு 19:28 |
47 | இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். | மாற் 2:1-3 மாற் 6:55 மாற் 6:56 மாற் 10:47 |
48 | இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார். | யோவா 4:41 யோவா 4:42 யோவா 2:18 யோவா 12:37 யோவா 15:24 யோவா 20:29 எண் 14:11 மத் 16:1 மத் 27:42 லூக் 10:18 லூக் 16:31 அப் 2:22 1கொரி 1:22 |
49 | அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். | சங் 40:17 சங் 88:10-12 மாற் 5:23 மாற் 5:35 மாற் 5:36 |
50 | இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். | யோவா 11:40 1இரா 17:13-15 மத் 8:13 மாற் 7:29 மாற் 7:30 மாற் 9:23 மாற் 9:24 லூக் 17:14 அப் 14:9 அப் 14:10 ரோம 4:20 ரோம 4:21 எபிரெ 11:19 |
51 | அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். | யோவா 4:50 யோவா 4:53 1இரா 17:23 |
52 | “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். |
53 | “உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். | சங் 33:9 சங் 107:20 மத் 8:8 மத் 8:9 மத் 8:13 |
54 | இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே. | யோவா 2:1-11 |