சங்கீதம் 50:3-6 - WCV
3
நம் கடவுள் வருகின்றார்: மௌனமாய் இருக்கமாட்டார்: அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் சுழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று!
4
உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.
5
'பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.'
6
வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்: ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)