| 1 | “சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்: ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள். | உபா 32:14 உபா 32:15 சங் 22:12 எரே 50:11 எரே 50:27 எசே 39:18 |
| 2 | இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: “உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன: அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள். | ஆமோ 6:8 சங் 89:35 |
| 3 | நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்” என்கிறார் ஆண்டவர். | 2இரா 25:4 எசே 12:5 எசே 12:12 |
| 4 | “வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்: கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்: நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்: மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள். | ஆமோ 3:14 பிரச 11:9 எசே 20:39 யோவே 3:9-12 மத் 23:32 மத் 26:45 மாற் 14:41 மாற் 5:5 ஓசி 4:15 ஓசி 9:15 ஓசி 12:11 |
| 5 | புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்: நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்”, என்கிறார் ஆண்டவர். | லேவி 7:12 லேவி 7:13 லேவி 23:17 |
| 6 | “உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்: நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். | லேவி 26:26 உபா 28:38 1இரா 17:1 1இரா 18:2 2இரா 4:38 2இரா 6:25-29 2இரா 8:1 எசே 16:27 |
| 7 | “நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்: ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று. | லேவி 26:18-21 லேவி 26:23-21 லேவி 26:24-21 லேவி 26:27-21 லேவி 26:28-21 உபா 28:23 உபா 28:24 1இரா 8:35 1இரா 8:36 2நாளா 7:13 2நாளா 7:14 ஏசா 5:6 எரே 3:3 எரே 5:24 எரே 5:25 எரே 14:4 எரே 14:22 ஆகா 1:10 ஆகா 1:11 சகரி 14:17 யாக் 5:17 வெளிப் 11:6 |
| 8 | ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை: இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். | 1இரா 18:5 ஏசா 41:17 ஏசா 41:18 எரே 14:3 |
| 9 | 'வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்: அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். | உபா 28:22 1இரா 8:37 2நாளா 6:28 ஆகா 2:17 |
| 10 | “எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்: உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்: உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின: உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். | யாத் 9:3-6 யாத் 12:29 யாத் 12:30 யாத் 15:26 லேவி 26:16 லேவி 26:25 உபா 7:15 உபா 28:22 உபா 28:27 உபா 28:60 சங் 78:49 சங் 78:50 |
| 11 | “சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். | ஆதி 19:24 ஆதி 19:25 ஏசா 13:19 எரே 49:18 ஓசி 11:8 2பேது 2:6 யூதா 1:7 |
| 12 | “ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!” | ஆமோ 4:2 ஆமோ 4:3 ஆமோ 2:14 ஆமோ 9:1-4 |
| 13 | ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே: காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே: தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே: காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே: நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும். | யோபு 38:4-11 சங் 65:6 ஏசா 40:12 சகரி 12:1 |