இணை வசன வேதாகமம்

யோவான் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.யோவா 4:3 யோவா 4:54 யோவா 10:39 யோவா 10:40 யோவா 11:54 லூக் 13:31-33 அப் 10:38
2யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.யாத் 23:16 யாத் 23:17 லேவி 23:34-43 எண் 29:12-38 உபா 16:13-16 1இரா 8:2 1இரா 8:65 2நாளா 7:9 2நாளா 7:10 எஸ்றா 3:4 நெகே 8:14-18 சகரி 14:16-19
3இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.யோவா 7:5 மத் 12:46 மத் 12:47 மாற் 3:31 லூக் 8:19 அப் 2:14
4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!” என்றனர்.நீதி 18:1 நீதி 18:2 மத் 6:1 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 லூக் 6:45
5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.யோவா 1:11-13 மீகா 7:5 மீகா 7:6 மாற் 3:21
6இயேசு அவர்களிடம், “எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை: உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.யோவா 7:8 யோவா 7:30 யோவா 2:4 யோவா 8:20 யோவா 13:1 யோவா 17:1 சங் 102:13 பிரச 3:1-15 அப் 1:7
7உலகு உங்களை வெறுக்க இயலாது: ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.யோவா 15:19 லூக் 6:26 யாக் 4:4 1யோவா 4:5
8நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்: நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.யோவா 7:6 யோவா 7:30 யோவா 8:20 யோவா 8:30 யோவா 11:6 யோவா 11:7 1கொரி 2:15 1கொரி 2:16
9அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
10தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.சங் 26:8 சங் 40:8 மத் 3:15 கலா 4:4
11திருவிழாவின்போது, “அவர் எங்கே?” என்ற யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள்.யோவா 11:56
12மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக்காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், “அவர் நல்லவர்” என்றனர். வேறு சிலர், “இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்” என்றனர்.யோவா 7:32 யோவா 9:16 பிலிப் 2:14
13ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.யோவா 3:2 யோவா 9:22 யோவா 9:34 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 20:19 நீதி 29:25 கலா 2:12 கலா 2:13 2தீமோ 2:9-13 வெளிப் 2:13
14பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.யோவா 7:2 யோவா 7:37 எண் 29:12 எண் 29:13 எண் 29:17 எண் 29:20 எண் 29:23-40
15“படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.யோவா 7:46 மத் 7:28 மத் 7:29 மத் 22:22 மத் 22:33 லூக் 2:47
16இயேசு மறுமொழியாக, “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல: அது என்னை அனுப்பியவருடையது.யோவா 3:11 யோவா 3:31 யோவா 8:28 யோவா 12:49 யோவா 12:50 யோவா 14:10 யோவா 14:24 யோவா 17:8 யோவா 17:14 வெளிப் 1:1
17அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.யோவா 1:46-49 யோவா 8:31 யோவா 8:32 யோவா 8:43 யோவா 8:47 சங் 25:8 சங் 25:9 சங் 25:12 சங் 119:10 சங் 119:101 சங் 119:102 ஏசா 35:8 எரே 31:33 எரே 31:34 ஓசி 6:3 மீகா 4:2 மல்கி 4:2 மத் 6:22 லூக் 8:15 அப் 10:1-6 அப் 11:13 அப் 11:14 அப் 17:11 பிலிப் 3:15 பிலிப் 3:16
18தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்: அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.யோவா 5:41 யோவா 8:49 யோவா 8:50 1கொரி 10:31-33 கலா 6:12-14 பிலிப் 2:3-5 1தெச 2:6 1பேது 4:11
19“மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!” என்றார்.யோவா 1:17 யோவா 5:45 யோவா 9:28 யோவா 9:29 யாத் 24:2 யாத் 24:3 உபா 33:4 உபா 1:17 அப் 7:38 கலா 3:19 எபிரெ 3:3-5
20மக்கள் மறுமொழியாக, “யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது” என்றனர்.யோவா 8:48 யோவா 8:52 யோவா 10:20 மத் 10:25 மத் 11:18 மத் 11:19 மத் 12:24 மாற் 3:21 மாற் 3:22 மாற் 3:30 அப் 26:24
21இயேசு அவர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.யோவா 5:9-11
22மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! - உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல: அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது -ஆதி 17:10-14 லேவி 12:3 ரோம 4:9-11 கலா 3:17
23ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?மத் 12:5
24வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்” என்றார்.யோவா 8:15 உபா 1:16 உபா 1:17 உபா 16:18 உபா 16:19 சங் 58:1 சங் 58:2 சங் 82:2 சங் 94:20 சங் 94:21 நீதி 17:15 நீதி 24:23 ஏசா 5:23 ஏசா 11:3 ஏசா 11:4 யாக் 2:1 யாக் 2:4 யாக் 2:9
25எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?யோவா 7:10 யோவா 7:11
26இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?சங் 40:9 சங் 40:10 சங் 71:15 சங் 71:16 நீதி 28:1 ஏசா 42:4 ஏசா 50:7 ஏசா 50:8 மத் 22:16 அப் 4:13 எபே 6:19 எபே 6:20 பிலிப் 1:14 2தீமோ 1:7 2தீமோ 1:8
27ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக் கொண்டனர்.யோவா 7:15 யோவா 6:42 மத் 13:54-57 மாற் 6:3 லூக் 4:22
28ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.யோவா 1:46 யோவா 8:14 மத் 2:23 லூக் 2:4 லூக் 2:11 லூக் 2:39 லூக் 2:51
29எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.யோவா 1:18 யோவா 8:55 யோவா 10:15 யோவா 17:25 யோவா 17:26
30இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.யோவா 7:19 யோவா 7:32 யோவா 8:37 யோவா 8:59 யோவா 10:31 யோவா 10:39 யோவா 11:57 மாற் 11:18 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:19
31கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், “மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?” என்று பேசிக்கொண்டார்கள்.யோவா 2:23 யோவா 2:24 யோவா 4:39 யோவா 6:14 யோவா 6:15 யோவா 8:30-32 யோவா 12:42 மத் 12:23 லூக் 8:13 அப் 8:13 யாக் 2:26
32இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.யோவா 7:47-53 யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:19 மத் 12:23 மத் 12:24 மத் 23:13
33எனவே இயேசு, “இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்: பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.யோவா 12:35 யோவா 12:36 யோவா 13:1 யோவா 13:3 யோவா 13:33 யோவா 16:5 யோவா 16:16-22 யோவா 17:11 யோவா 17:13 மாற் 16:19
34நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது” என்றார்.யோவா 8:21-24 யோவா 13:33-36 யோவா 14:3 யோவா 14:6 யோவா 17:24 நீதி 1:24-31 ஓசி 5:6 மத் 23:39 லூக் 13:24 லூக் 13:25 லூக் 13:34 லூக் 13:35 லூக் 17:22 லூக் 17:23
35இதை கேட்ட யூதர்கள்,”நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 செப் 3:10 அப் 21:21 யாக் 1:1 1பேது 1:1
36'நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றாரே! இதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.யோவா 3:4 யோவா 3:9 யோவா 6:41 யோவா 6:52 யோவா 6:60 யோவா 12:34 யோவா 16:17 யோவா 16:18
37திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்: என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.லேவி 23:36 லேவி 23:39 எண் 29:35 1இரா 8:65 1இரா 8:66
38மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.உபா 18:15
39தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.யோவா 14:16 யோவா 14:17 யோவா 14:26 நீதி 1:23 ஏசா 12:3 ஏசா 32:15 ஏசா 44:3 யோவே 2:28 லூக் 3:16 லூக் 24:49 அப் 1:4-8 அப் 2:4 அப் 2:17 அப் 2:38 அப் 4:31 ரோம 8:9 எபே 1:13 எபே 1:14 எபே 4:30
40கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.
41வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?யோவா 7:31 யோவா 1:41 யோவா 1:49 யோவா 4:25 யோவா 4:29 யோவா 4:42 யோவா 6:69 மத் 16:14-16
42தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர்.யோவா 7:27 சங் 132:11 ஏசா 11:1 எரே 23:5 மீகா 5:2 மத் 2:5 லூக் 2:4 லூக் 2:11
43இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.யோவா 7:12 யோவா 9:16 யோவா 10:19 மத் 10:35 லூக் 12:51 அப் 14:4 அப் 23:7-10
44சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.யோவா 7:30 யோவா 8:20 யோவா 18:5 யோவா 18:6 அப் 18:10 அப் 23:11 அப் 27:23-25
45தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள்.யோவா 7:32 அப் 5:21-27
46காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.யோவா 7:26 மத் 7:29 லூக் 4:22
47பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ?யோவா 7:12 யோவா 9:27-34 2இரா 18:29 2இரா 18:32 2நாளா 32:15 மத் 27:63 2கொரி 6:8
48தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?யோவா 7:26 யோவா 7:50 யோவா 12:42 எரே 5:4 எரே 5:5 மத் 11:25 அப் 6:7 1கொரி 1:20 1கொரி 1:22-28 1கொரி 2:8
49இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.யோவா 9:34 யோவா 9:40 ஏசா 5:21 ஏசா 28:14 ஏசா 29:14-19 ஏசா 65:5 1கொரி 1:20 1கொரி 1:21 1கொரி 3:18-20 யாக் 3:13-18
50அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,யோவா 3:1 யோவா 3:2 யோவா 19:39
51“ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார்.உபா 1:17 உபா 17:8-11 உபா 19:15-19 நீதி 18:13
52அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.யோவா 9:34 ஆதி 19:9 யாத் 2:14 1இரா 22:24 நீதி 9:7 நீதி 9:8
53(அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 76:5 சங் 76:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.