9
இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.
10
தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
11
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்:
12
அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்: நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்.
13
நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.” இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.