1பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி: இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.ஆமோ 3:7 ஆமோ 7:1 ஆமோ 7:4 ஆமோ 7:7 ஆமோ 8:1 சகரி 1:20 சகரி 3:1 2ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன: அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன: அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.எரே 24:5-7 ஓசி 9:10 மீகா 7:1 3அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, “எரேமியா, நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் “அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன” என்றேன்.எரே 1:11-14 1சாமு 9:9 ஆமோ 7:8 ஆமோ 8:2 சகரி 4:2 சகரி 5:2 சகரி 5:5-11 மத் 25:32 மத் 25:33 4ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:5இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.நாகூ 1:7 சகரி 13:9 மத் 25:12 யோவா 10:27 1கொரி 8:3 கலா 4:9 2தீமோ 2:19 6அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்ணாயிருக்கிறேன்: அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்: கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்: பிடுங்கி எறியமாட்டேன்.எரே 21:10 உபா 11:12 2நாளா 16:9 நெகே 5:19 யோபு 33:27 யோபு 33:28 சங் 34:15 1பேது 3:12 7நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளதை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.எரே 31:33 எரே 31:34 எரே 32:39 உபா 30:6 எசே 11:19 எசே 11:20 எசே 36:24-28 8ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.எரே 24:2 எரே 24:5 எரே 29:16-18 9உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.எரே 15:4 எரே 34:17 உபா 28:25 உபா 28:37 உபா 28:65-67 எசே 5:1 எசே 5:2 எசே 5:12 எசே 5:13 10நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.எரே 5:12 எரே 9:16 எரே 14:15 எரே 14:16 எரே 15:2 எரே 16:4 எரே 19:7 எரே 34:17 ஏசா 51:19 எசே 5:12-17 எசே 6:12-14 எசே 7:15 எசே 14:12-21 எசே 33:27