| 1 | அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் எரேமியா வழியாகச் சொல்லி அனுப்பிய எல்லாச் சொற்களையும் மக்கள் அனைவருக்கும் அவர் அறிவித்து முடித்தார். | எரே 26:8 எரே 42:22 எரே 51:63 |
| 2 | பின்னர் ஓசயாவின் மகன் அசரியாவும், காரயாகின் மகன் யோகனானும், இறுமாப்புக் கொண்ட எல்லா ஆள்களும் எரேமியாவை நோக்கி, “நீ பொய் சொல்கிறாய். நீங்கள் எகிப்துக்குப் போய் அங்கே தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்காக நம் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. | எரே 40:8 எரே 43:1 |
| 3 | ஆனால் கல்தேயர் கையில் எங்களை ஒப்புவிக்கவும், எங்களைச் சாவுக்கு உள்ளாகவும், எங்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தவுமே நேரியாவின் மகன் பாரூக்கு எங்களுக்கு எதிராக உன்னைத் தூண்டிவிட்டுள்ளான்” என்றனர். | எரே 43:6 எரே 36:4 எரே 36:10 எரே 36:26 எரே 45:1-3 |
| 4 | எனவே காரயாகின் மகன் யோகனானும், எல்லாப் படைத்தலைவர்களும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை: அதாவது யூதாவிலேயே தங்கவில்லை. | எரே 42:5 எரே 42:6 எரே 44:5 2நாளா 25:16 பிரச 9:16 |
| 5 | காரயாகின் மகன் யோகனானும் படைத்தலைவர்கள் அனைவரும் யூதா நாட்டில் வாழும் பொருட்டு, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த யூதாவில் எஞ்சினோர் அனைவரையும் | எரே 40:11 எரே 40:12 எரே 41:15 எரே 41:16 1சாமு 26:19 |
| 6 | அதாவது, ஆண், பெண், சிறுவர், அரசனின் புதல்வியர் ஆகியோரையும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் விட்டுவைத்திருந்த எல்லாரையும், இறைவாக்கினர் எரேமியாவையும் நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு, | எரே 41:10 எரே 52:10 |
| 7 | எகிப்து நாட்டுக்குப் போய்த் தகபனகேசை அடைந்தனர்: ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை. | 2நாளா 25:16 |
| 8 | தகபனகேசில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: | சங் 139:7 2தீமோ 2:9 |
| 9 | பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள். தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை. | எரே 13:1-11 எரே 18:2-12 எரே 19:1-15 எரே 51:63 எரே 51:64 1இரா 11:29-31 ஏசா 20:1-4 எசே 4:1-17 எசே 5:1-17 எசே 12:3-16 ஓசி 12:10 அப் 21:11 வெளிப் 18:21 |
| 10 | பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன் தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான். | எரே 1:15 எரே 25:6-26 எரே 27:6-8 எசே 29:18-20 தானி 2:21 தானி 5:18 தானி 5:19 |
| 11 | அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்: கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்: வாளுக்குரியோர் வாளால் மாள்வர். | எரே 25:19 எரே 46:1-26 ஏசா 19:1-25 எசே 29:19 எசே 29:20 எசே 30:1-32 |
| 12 | மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்: அத்தெய்வச் சிலைகளை எரித்துத் தூக்கிச்செல்வான். இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல், அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்: அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான். | எரே 46:25 எரே 48:7 எரே 50:2 எரே 51:44 யாத் 12:12 2சாமு 5:21 ஏசா 19:1 ஏசா 21:9 ஏசா 46:1 எசே 30:13 செப் 2:11 |
| 13 | எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்: எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான். | ஏசா 19:18 |