1 | இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள். | 2தீமோ 4:3 ஆதி 49:1 ஏசா 2:2 எரே 48:47 எரே 49:39 எசே 38:16 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 1தீமோ 4:1 2பேது 3:3 1யோவா 2:18 யூதா 1:17 |
2 | தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், | 2தீமோ 3:4 ரோம 15:1-3 2கொரி 5:15 பிலிப் 2:21 யாக் 2:8 |
3 | அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், | மத் 10:21 ரோம 1:31 |
4 | துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர். | 2பேது 2:10-22 யூதா 1:8 யூதா 1:9 |
5 | இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இத்தகையவர்களோடு சேராதே! | ஏசா 29:13 ஏசா 48:1 ஏசா 48:2 ஏசா 58:1-3 எசே 33:30-32 மத் 7:15 மத் 23:27 மத் 23:28 ரோம 2:20-24 1தீமோ 5:8 தீத் 1:16 |
6 | இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து பேதைப் பெண்களைத் தம்வயப்படுத்திக் கொள்கின்றனர். இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால் கவரப்பட்டுப் பாவங்களில் மூழ்கியுள்ளனர். | மத் 23:14 தீத் 1:11 யூதா 1:4 |
7 | இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள். | 2தீமோ 4:3 2தீமோ 4:4 உபா 29:4 நீதி 14:6 ஏசா 30:10 ஏசா 30:11 எசே 14:4-10 மத் 13:11 யோவா 3:20 யோவா 3:21 யோவா 5:44 யோவா 12:42 யோவா 12:43 1கொரி 3:1-4 எபே 4:14 எபிரெ 5:11 |
8 | இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றது போல இம் மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீரழிந்த மனம் கொண்டவர்கள்: விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள். | யாத் 7:11 யாத் 7:22 யாத் 8:7 யாத் 8:18 |
9 | ஆனால் இனி இவர்கள் அதிகம் முன்னேற மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது போன்று இவர்களின் அறியாமை வெளியாகிவிடும். | 2தீமோ 3:8 யாத் 7:12 யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 1இரா 22:25 சங் 76:10 எரே 28:15-17 எரே 29:21-23 எரே 29:31-23 எரே 29:32-23 எரே 37:19 அப் 13:11 அப் 19:15-17 |
10 | என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய். | லூக் 1:3 பிலிப் 2:22 1தீமோ 4:6 |
11 | அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். | அப் 9:16 அப் 20:19 அப் 20:23 அப் 20:24 ரோம 8:35-37 1கொரி 4:9-11 2கொரி 1:8-10 2கொரி 4:8-11 2கொரி 11:23-28 எபிரெ 10:33-34 |
12 | கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். | 2கொரி 1:12 1தீமோ 2:2 1தீமோ 3:16 1தீமோ 6:3 தீத் 1:1 தீத் 2:12 2பேது 3:11 |
13 | ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். | 2தீமோ 3:8 2தீமோ 2:16 2தீமோ 2:17 2தெச 2:6-10 1தீமோ 4:1 2பேது 2:20 2பேது 3:3 வெளிப் 12:9 வெளிப் 13:14 வெளிப் 18:23 |
14 | நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்: யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. | 2தீமோ 1:13 2தீமோ 2:2 1தீமோ 4:16 |
15 | நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. | 2தீமோ 1:5 1சாமு 2:18 2நாளா 34:3 சங் 71:17 நீதி 8:17 நீதி 22:6 பிரச 12:1 லூக் 1:15 லூக் 2:40 |
16 | மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. | 2சாமு 23:2 மத் 21:42 மத் 22:31 மத் 22:32 மத் 22:43 மத் 26:54 மத் 26:56 மாற் 12:24 மாற் 12:36 யோவா 10:35 அப் 1:16 அப் 28:25 ரோம 3:2 ரோம 15:4 கலா 3:8 எபிரெ 3:7 எபிரெ 4:12 2பேது 1:19-21 |
17 | இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார். | சங் 119:98-100 1தீமோ 6:11 |